Breaking News

ஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரித்து, வித்தகனாக மாற்ற உதவும் ஒரு அற்புத இலை!

ஆண்களில் பலர் சந்திக்கும் பிரச்சனையாக இருப்பது, விந்தணு பற்றாக்குறை, விந்தணு உற்பத்தியின்மை. ஒரு ஆணுக்கு விந்தணு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது ஆணுக்கு திருமணமாகி, உடலுறவில் மனைவியை திருப்திபடுத்த இயலாத சூழலில், குழந்தை பெற்றுக்கொள்ள நிலையில் தான் தெரியவரும். முன்கூட்டியே இதை அறிய வேண்டுமானால், உடல் நிலையை, பிறப்புறுப்பின் மாற்றங்களை தொடர்ந்து கவனித்து வந்தாலே, பிறப்புறுப்பு மற்றும் அதன் வெளிப்பாடுகளில் உள்ள மாற்றங்களை ஓரளவு அறிய இயலும்.
guava benefits in tamil
மிகத்துல்லியமாக விந்தணு உற்பத்தியை பற்றி அறிய விரும்பினால், மருத்துவரிடம் ஸ்பெர்ம் டெஸ்ட் அதாவது விந்தணு பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இவ்வாறு விந்தணு பற்றாக்குறையை பற்றி அந்த பின், அதை எப்படி அதிகரிப்பது என்ற கேள்வி அனைத்து ஆண்களுக்கும் தோன்றும்; உங்கள் கேள்விக்கான பதிலை அளிக்க, இந்த பதிப்பினை சமர்ப்பிக்கிறோம். படித்து பயனடையுங்கள்!

என்ன இலை!

என்ன இலை!

ஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரிக்க உதவும் அந்த அற்புத இலை என்ன தெரியுமா? அது தான் கொய்யா இலை. இனப்பெருக்க சக்தியை விருத்தியடையச் செய்ய கொய்யா இலைகள் பேருதவி புரிகின்றன. இந்த கொய்யா இலையை உணவிலோ அல்லது பானமாகவோ உட்கொண்டால், விந்தணுக்களின் உற்பத்தியை விரைவில் அதிகரிப்பதோடு, விந்தணுக்களின் தரமும் உயர்ந்து இருப்பதை காணலாம். இது விந்தணுக்களின் எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்கச் செய்யும். இந்த இலைகள் இது தவிர பற்பல நன்மைகளை மனித உடலுக்கு அளிக்கின்றன.
வேறு பயன்கள்

வேறு பயன்கள்

கொய்யா இலைகள் அதிக அளவு ஆன்டி ஆக்சிடென்டுகளை கொண்டுள்ளதால், இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகின்றன. இந்த இலைகளை தேயிலைத்தூள் போன்று தயார் செய்து மூன்று மாதங்கள் தொடர்ந்து குடித்து வந்தால், அது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி, சரியான எடையில் நல்ல கொழுப்பை மட்டும் உடலில் தங்க வைத்து, உடலினை சீராக இயங்க வைக்க உதவும்.
கொய்யா இலைகளை சாறு போன்று தயாரித்து, வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஊற வைத்து அலசி வந்தால், பேன் தொல்லையை முற்றிலுமாக போக்க உதவும். கொய்யா இலைகளை பொடி செய்து, உணவிலோ அல்லது தேநீர் போன்றோ தயாரித்து உட்கொண்டால், அது செரிமான பிரச்சனைகளை முற்றிலுமாக அழித்து, வயிறு தொடர்பான பிரச்சனைகளை போக்கி, வயிறை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
அடுத்ததாக, கொய்யா இலையை கொண்டு தேநீர் தயாரிப்பது எப்படி என்று படித்தறிவோம் வாருங்கள்!
கொய்யா இலை தேநீர்


கொய்யா இலை தேநீர்

தேவையான பொருட்கள்:
கொய்யா இலையை தயாரிக்க சுத்தமான கொய்யா இலைகள் 5, சுத்தமான தேனினை தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்; மேலும் 2 ஏலக்காய்களை பொடி செய்தோ அல்லது தட்டிப்போட்டோ உபயோகித்துக் கொள்ளலாம்.
செய்முறை:
எடுத்து வைத்த சுத்தமான கொய்யா இலைகளை வெயிலில் காயவைத்தோ அல்லது பச்சையாகவோ அல்லது காயவைத்து பொடி செய்தோ நீரில் சேர்த்து கொதிக்க விட வேண்டும்; பின் அந்த நீரினை நன்றாக வடிகட்டி,அதில் தேனை தேவையான அளவு சேர்த்து குடிக்கலாம்; கொய்யா இலையின் வாசம் குறைய ஏலக்காய் போன்ற நறுமண பொருட்களை தட்டி டீயில் சேர்த்து பருகலாம்.
கொய்யா இலைகளினால் செய்த தேநீரை தொடர்ந்து பருகி வருவது, புற்றுநோய், பாக்டீரியா தொந்தரவுகள், எரிச்சல், அரிப்பு போன்றவற்றை உடலில் ஏற்படாமல் தடுக்க உதவும்; மேலும் வயிற்றுப்போக்கு, டையேரியா, காய்ச்சல், தொண்டை பிரச்சனைகள் போன்றவை ஏற்படாமல் அல்லது இது போன்ற நோய்களை குணப்படுத்த உதவும்.
வைட்டமின்கள்

வைட்டமின்கள்

கொய்யாவில் போலிக் அமிலம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி, காப்பர், மாங்கனீஸ் போன்ற வைட்டமின்கள், தாதுக்கள், அமில சத்துக்கள் நிறைந்து உள்ளன. இந்தப் பழத்தில் நிறைந்து காணப்படும் ஆன்டி ஆக்சிடென்டுகளும், போலிக் அமிலமும் விந்தணு ஆற்றலை, அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க பெரிதும் உதவுகின்றன. உடலுக்கு தேவையான முக்கிய சத்துக்களை அளித்து உடலை பலப்படுத்துவதால், நோய் எதிப்பு சக்தி அதிகரித்து தேகம் ஆரோக்கியமானதாக மாறிவிடுகிறது.
விந்தணு குறைபாடு

விந்தணு குறைபாடு

விந்தணு குறைபாடு என்பது உடலில் ஏற்படும் பிற குறைபாடுகளை போன்ற குணப்படுத்தக் கூடிய ஒரு உடல் குறைபாடே! இதை ஒரு பெரிய இழப்பாக எண்ணி, நான் ஆண்மகன் அல்ல என்று முட்டாள்தனமாக எண்ணி, உங்கள் மனதை நீங்களே குழப்பி, தேவையற்ற மனஅழுத்தத்திற்கு உள்ளாகாமல், தைரியமாக செயல்படுங்கள். விந்தணு குரைவாக இருந்தால் என்ன, இப்பொழுது தான் அதை அதிகரிக்கும் வழி என்ன என்று தெரிந்துவிட்டதே! இந்த வழியை அல்லது மருத்துவ முறைகளை, நல்ல ஒரு மருத்துவரின் ஆலோசனையுடன் பின்பற்றி மேற்கொண்டு வளமான வாழ்வு வாழவும்.

                                                                                                                                             நன்றி
                                                                                                                             போல்ட் ஸ்கை தமிழ்

Avoid coal, petrol and diesel .. Only then can we prevent global warming

சென்னை: அனல் மின் நிலையம், போக்குவரத்து ஆகிய துறைகளே புவிவெப்பமயமாதலுக்கு முக்கிய காரணங்கள் என பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் வெற்றிச் செல்வன் தெரிவித்துள்ளார். பூவுலகின் நண்பர்கள் (Friends of Earth)இயக்கமானது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிரச்சினைகளை கையில் எடுத்து அதற்காக போராடி வருகிறது. எட்டு வழிச் சாலை, சுற்றுச்சூழல் தாக்க வரைவு, காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம், காலநிலை மாற்றம் உள்ளிட்டவைகளுக்காக குரல் கொடுத்து வருகிறது. Exclusive: Poovulagin Nanbargal movement Vetriselvan says about Global warming இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் வெற்றிச் செல்வன் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டி கேள்வி பதில் வடிவில்: கே: சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட 12 நகரங்கள் 3 மீட்டர் ஆழத்திற்கு கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து உங்கள் கருத்து என்ன ப: 1980 ஆம் ஆண்டுகளில் இருந்தே புவி வெப்பமயமாதலை கேள்விப்பட்டு வருகிறோம். பூமி சூடாகி வருகிறது. இதன் காரணமாக காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. புவி வெப்பமாவதன் காரணமாக ஆர்டிக் மற்றும் அன்டார்டிக் பகுதிகளில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. இதனால் தண்ணீரின் அளவு அதிகமாகிறது. இதனால் கடல் மட்டத்தின் அளவானது உயர்ந்து கொண்டே இருக்கிறது. இது போல் நிகழும் போது கடல் மட்டத்தை விட உயரம் குறைவாக உள்ள நிலப்பகுதிகள் உள்ளே போய்விடும். இதுதான் இயல்பு, எனவே தாழ்வாக இருக்கும் பகுதிகள் கடலுக்குள் செல்ல வாய்ப்பிருக்கிறது. நாசாவின் ஆய்வானது முதல் ஆய்வு அல்ல. அதற்கு முன்பாகவே பல்வேறு ஆய்வுகள் வெளியாகியுள்ளன. அண்மையில் 2018ஆம் ஆண்டு Central Climatic Centre என்ற அமைப்பு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். இந்த அறிக்கையில் 2030 - 2040 ஆம் ஆண்டுக்குள் கடலின் நீர் மட்டம் உயர்வதால் பல பகுதிகள் மூழ்கும் ஆபத்து உள்ளதாக சொல்லியுள்ளார்கள். எந்த காலகட்டத்தில் எந்த அளவுக்கு இதெல்லாம் நடக்கும் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வந்துள்ளன. நாசா இந்த நூற்றாண்டின் முடிவில் இது போல் நிகழும் என சொல்லியுள்ளது. பூமியின் தட்பவெப்பநிலையி்ல எந்த அளவுக்கு மாற்றம் ஏற்படுகிறது, அதன் காரணமாக பனி எந்த அளவுக்கு உருக்கம் இருக்கும், இதன் காரணமாக கடல் மட்டம் எந்த அளவுக்கு இருக்கும் என சொல்லியுள்ளது. பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் கடல் மட்டம் உயர்வு என பார்த்தால் 3 அடி முதல் 7 அடி வரை உயர வாய்ப்புள்ளது. அப்படி நிகழும் பட்சத்தில் பல நிலப்பரப்புகள் கடலுக்குள் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்டவை எல்லாம் கடலில் மூழ்கக் கூடிய ஆபத்து இருக்கும் பகுதிகள். கூடுதலாக டெல்டா பகுதிகள், கிருஷ்ணா கோதாவரி பகுதிகள் உள்ளிட்ட டெல்டா பகுதிகள் இவையெல்லாமும் கடலுக்குள் மூழ்குவதற்கான ஆபத்து இருக்கின்றன. இந்த ஆபத்தை எதிர்நோக்கிதான் சென்று கொண்டிருக்கிறோம். கே: புவி வெப்பமயமாதலை தடுக்க ஐநா எடுக்கும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறதா ப: 1980 களிலேயே புவி வெப்பயமாதல் குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துவிட்டார்கள். 1991 ஆம் ஆண்டு பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக ஐநா ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கினார்கள். பருவநிலை மாற்றத்திற்கான ஐ நா குழுவின் ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக 1997 இல் கைட்டோ புரோட்டோகால் என்ற ஒப்பந்தம் வந்தது. இந்த இரு ஒப்பந்தங்களும், "காலநிலை மாற்றம் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதை தடுக்க நிறைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாடுகள் தாமாக முன் வந்து பசுமை இல்ல வாயுக்களான கார்பன், மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு போன்ற வாயுக்களின் வெளியேற்றத்தை குறைக்க வேண்டும்" என்ற அளவில் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இந்தியா அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அமெரிக்கா தொடக்கத்திலிருந்தே இந்த ஒப்பந்தத்தை எதிர்த்துக் கொண்டுதான் வந்தது. இந்த இரு ஒப்பந்தங்களுமே காலாவதியான பிறகு 2016 ஆம் ஆண்டு பாரீஸில் இன்னொரு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. மற்ற இரு ஒப்பந்தங்களும் வெறும் ஆலோசனைகளை மட்டுமே சொல்லியுள்ளன. ஆனால் இந்த பாரீஸ் ஒப்பந்தமானது இலக்கை நிர்ணயித்தது. இதில் "பூமியின் தட்பவெப்பநிலை கண்டிப்பாக உயரக் கூடும். அதை எந்தளவுக்கு உயரவிடலாம் என்பதை பார்க்கும் போது 1.5 டிகிரி சென்டிகிரேட் அளவுக்கு உயர்ந்தால் நம்மால் சமாளிக்க முடியும். இதுவும் ஆபத்தானதுதான், எனினும் உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகள் இருந்தது. இனி வரும் காலங்களில் பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸுக்கு உயரத்தான் போகிறது. அதற்குள் வெப்பநிலையை வைத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இது 2 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் சென்றால் மிகவும் ஆபத்தாகிவிடும்" என அந்த ஒப்பந்தம் சொல்லியதோடு அதற்கு நாம் என்னவெலாம் செய்ய வேண்டும் என்பதையும் அந்த ஒப்பந்தம் சொல்லியுள்ளது. இன்னும் உள்ள 10 ஆண்டுகளில் உலக நாடுகளில் இருந்து வெளியேறக் கூடிய பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை 50 சதவீதமாக குறைக்க வேண்டும். 2050 ஆம் ஆண்டுக்குள் அதை ஜீரோவாக்க வேண்டும். கார்பன் வெளியேற்றமே இருக்கக் கூடாது. அப்படியான ஒரு நிலை வந்தால் மட்டும்தான் பூமியின் வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அளவுக்கு நம்மால் கட்டுப்படுத்த முடியும். இதை பின்பற்றுமாறு ஐக்கிய நாடுகள் முன் வைக்கிறார்கள். இந்த ஆலோசனைகளின்படி உலக நாடுகள் நடந்து கொள்கிறார்களா என்றால் ஏமாற்றமே விஞ்சுகிறது. கொரோனா காலத்தில் கூட பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் அதிகமாகவே உள்ளது. கே: புவிவெப்பமயமாதலுக்கு எதிராக மத்திய மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கை பலனை தருகிறதா? ப: இந்தியாவை பொருத்தமட்டில் 2016 ஆம் ஆண்டு பாரீஸ் ஒப்பந்தத்தில் நாம் கையெழுத்திட்ட பின்னர் பசுமை இல்ல வாயுக்களை இந்த அளவுக்குத்தான் வெளியிடுவோம் என ஒவ்வொரு நாடுகளும் அளவை நிர்ணயித்துக் கொள்ளலாம். அந்த வகையில் இந்தியா 2030-ஆம் ஆண்டுக்குள் 30 சதவீதம் அளவுக்கு பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை குறைப்போம் என இந்தியா வாக்குறுதி அளித்தது. புவி வெப்பமயமாதலுக்கு அடிப்படை காரணமாக இருப்பதே நிலக்கரிதான். அப்படியென்றால் நிலக்கரியை சார்ந்திருக்கக் கூடிய அனல்மின் நிலையங்களில் இருந்து வெளியே வர வேண்டும். இதற்கு மாற்று என்றால் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்தான் (renewable energy). இந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி பயணம் செய்வதற்கான முன்னெடுப்புகளை இந்தியா செய்து கொண்டிருக்கிறது. மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்த போது புவிவெப்பயமாதல் பிரச்சினையை எதிர்கொள்ள 12 திட்டங்களை அவர்கள் வகுத்தார்கள். இதையடுத்து வந்த பாஜக அரசு 2 திட்டங்களை அந்த 12 திட்டங்களுடன் சேர்த்தது. இதை தவிர்த்து கூடுதல் செயல்பாடுகள் இந்தியாவில் இல்லை. இது போதாது. 2019 ஆம் ஆண்டு ஐஐடி கான்பூர் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டார்கள். அதில் ஒட்டுமொத்தமாக காலநிலை மாற்றம் பிரச்சினையால் இந்தியாவில் எந்த மாதிரியான பிரச்சினைகள் உருவாகும் என்பதை கூறியுள்ளார்கள். அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய அளவில் புவியின் வெப்பம் 1 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்கிறார்கள். இந்தியாவுக்கான பருவநிலைக்கான மாதிரி என்பதே கிடையாது என்கிறது அந்த ஆய்வு. இந்தியாவில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணிகளை செய்கிறோம். இவையும் பூமி வெப்பமயமாதலுக்கானதுதான். இந்தியாவில் புவி வெப்பமயமாதலுக்கு காரணமாக இருப்பது தெர்மல் மின் நிலையம், போக்குவரத்து ஆகிய இரு துறைகள்தான். இந்த இரு துறைகளிலிருந்து பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை குறைக்க வேண்டும். நிலக்கரியை சார்ந்துள்ள மின் உற்பத்தியை முற்றிலும் தடை செய்ய வேண்டும். ஹைட்ரோகார்பன், மீத்தேன், பெட்ரோலியம், ஆயில் கேஸ் ஆகிய தொழில் துறைகளில் இருந்து நாம் வெளியே வர வேண்டும். போக்குவரத்து என்பதை முழுக்க முழுக்க எலக்ட்ரிக்கல் வாகனங்களை சார்ந்து இருக்க வேண்டும். இதையெல்லாம் நாம் செய்ய இன்னும் தயாராக இல்லை. நமது உற்பத்தி என்பது சூழலியல் சார்ந்து பருவநிலை மாற்றத்தை அடிப்படையாக கொண்டு இருக்க வேண்டும். அதிக மழை, வெள்ளம், வறட்சி, வெப்பம், குளிர் ஆகியவற்றை தடுக்க இயற்கை சார்ந்த பகுதிகளை (Ecologically sensitive areas)பாதுகாக்க வேண்டும் என ஐநா அறிவுறுத்துகிறது. மேற்கு தொடர்ச்சி மலைகள், அலையாத்தி காடுகள், மன்னார் வளைகுடா பகுதியில் பவள பாறைகள், ஈரநிலங்கள் உள்ளிட்டவை நமக்கு அரணாக இருந்து நமக்கான பாதிப்புகளை குறைக்கும். ஈஐஏ 2020, சூழலுக்கு எதிரான உற்பத்திகள் எல்லாம் வெப்பநிலை உயருவதை தடுப்பதற்கு முரணாக உள்ளது. வரும் பட்ஜெட்டில் காலநிலை மாற்றத்தை காக்க ஏதேனும் நிதி ஒதுக்கீடு, கொள்கைகளை கொண்டு வருகிறார்களா என பார்ப்போம் என்றார் வெற்றிச் செல்வன்.