Breaking News

தலை முடி கொட்டுறதுக்கு வேற எதுவுமே காரணமில்ல... இது மட்டும்தான் காரணமாம்..!!

தினமும் செய்யும் இந்த ஒரு விஷயம்தான், உங்கள் வழுக்கைக்குக் காரணம் என்றால், நீங்கள் அதிர்ந்து போய்விடுவீர்கள். உலகில் அதிகம் கிண்டலுக்கு ஆளாபவர்கள், தலையில் முடி கொட்டிய நபர்கள்தான்.
தலைமுடி இழப்பை, வாழ்வையே இழந்ததுபோல எண்ணிக்கொண்டு மனம்வருந்தி, கூனிக்குறுகி நடப்பவர்கள் ஏராளம். சிலரோ, தலையில் முடி இல்லாமல் இருப்பதை மறைத்து, விக் வைத்துக்கொண்டு, பலரின் கிண்டலுக்கு ஆளாவதும் உண்டு.

வழுக்கைக்கு முதல் காரணம் முடிஉதிர்தல்

வழுக்கைக்கு முதல் காரணம் முடிஉதிர்தல்காலை எழும்போது, தலையணையில் முடி கொட்டியிருக்கிறதா? தலை சீவும்போது, கொத்து கொத்தாக முடி உதிர்ந்து உங்களை பயமுறுத்துகிறதா?
ஆரோக்கியமான மனிதர்களுக்கு தினமும் முடி உதிர்தல் இயல்பான ஒன்றுதான், உதிர்ந்த அளவு, மீண்டும் வளரும் இயல்பு மிக்கது, தலைமுடி.
ஆயினும் கொத்து கொத்தாக முடி உதிர்வது, தலையில் சில இடங்களில் முடி வளராமை போன்றவை, தலை வழுக்கையை நோக்கிச் செல்கிறது என்பதை உணர்த்துகின்றன.
தக்க நேரத்தில் சிகிச்சை மேற்கொள்வதன் மூலம், தலை வழுக்கையாகாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

அதிகம் உதிர என்ன காரணம்?

அதிகம் உதிர என்ன காரணம்? சில தனிப்பட்ட ஹார்மோன் குறைபாடுகளைத் தவிர, தலைமுடி உதிர்வதற்கு, நம்முடைய அன்றாட பழக்கவழக்கங்களே, பெரிதும் காரணமாகின்றன என்பதை நாமறிவோமா?
நம்முடைய வழக்கமான தினசரி செயல்களே, தலைமுடி உதிர்வுக்கு முக்கிய காரணமென்று நாம் அறிந்துகொண்டால், நிச்சயம் அதிர்ந்துதான் போவோம்.

குளித்தவுடன் தலைசீவுவதுகுளித்தவுடன் தலைசீவுவது

டெய்லி வாழ்க்கையில், பலர் அதிகம் செய்யும் ஒரு அவசர காரியம், குளித்தவுடன் தலைசீவுவது. ஈரத்தலையில் மயிர்க்கால்கள் மிருதுவாக இருக்கும்போது தலையை அழுத்தி சீவுவதன் மூலம், மயிர்க்கால்களில் இருந்து முடிகள் இழுக்கப்பட்டு, முடி அதிகமாக உதிர்கிறது.
ஊட்டச்சத்து குறைபாடு.

ஊட்டச்சத்து குறைபாடு.

முடி உதிர்வதற்கு நாம் சாப்பிடும் உணவு ஒருகாரணமாக இருந்தாலும், நாம் சாப்பிடாத உணவும், மற்றொரு காரணமாக இருக்கக்கூடும். உடல் திசுக்கள் வளரஉதவும் ஊட்டச்சத்துக்கள்போல, முடி வளர்வதற்கும் வைட்டமின் மற்றும் தாதுக்கள் தேவை. இரும்புச்சத்து, பிராண வாயுவை இரத்தத்தின் மூலம் உடலெங்கும் கொண்டு செல்லும்போது, உடல்செல்களின் உற்பத்தி சீராகிறது. நாம் இரும்புச்சத்து நிறைந்த உணவை இழக்கும்போது, உடலில் பிராண வாயுவின் இயக்கம் பாதித்து, செல்வளர்ச்சி தடைபட்டு, முடி உதிர்கிறது. திசுக்களின் வளர்ச்சிக்கு உதவும் ஜின்க் எனும் துத்தநாகத்தின் இழப்பாலும், முடி உதிர்கிறது. இதுபோல, மயிர்க்கால் வளமாக இருக்க உதவும் புரோட்டின் மற்றும் வைட்டமின்C நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளாததாலும், தலைமுடிகள் உதிரும்.
கீரைகள், காலிஃபிளவர், தக்காளி, பீன்ஸ், மாம்பழம், ஆரஞ்சு, தயிர் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். கொண்டைக்கடலை உள்ளிட்ட நவதானியங்கள் மற்றும் பாதாம், முந்திரி போன்ற பருப்புகளை சாப்பிட, தலைமுடி உதிர்வது குறையும்.

அதிக மனஅழுத்தம் அதிக மனஅழுத்தம்

இன்றுள்ள பல வியாதிகளுக்கு அடிப்படையென்று, சித்த மருத்துவர்களும், மேலை மருத்துவர்களும் கை காட்டுவது, மன அழுத்தத்தைத் தான். அதற்குக் காரணங்கள் பல இருந்தாலும், அதனால் அடையும் இன்னல்கள் பலப்பல. அதிலொன்றுதான், முடி உதிர்வது. ஆம்! அதிக மன உளைச்சலால், திசு வளர்ச்சிக்கு துணையாகும் ஹார்மோன் சுரப்பில் பாதிப்பு ஏற்படுவதால், தலைமுடி உதிர்கிறது.

பரம்பரை கோளாறு.பரம்பரை கோளாறு.

நாற்பதைக்கடக்கும் பெண்கள் அல்லது நாற்பதைநெருங்கும் பெண்கள் சிலருக்கு தலைமுடியில் அடர்த்திகுறைந்து, முடிஅதிகம் உதிர்வதால், தலையில் முடியே இல்லாமல், கிட்டத்தட்ட வழுக்கைத் தலை போன்று காணப்படுவார்கள். பெண்களுக்கு மிகவும் மன உளைச்சலை அளிக்கும் ஒன்றாக இருக்கும் இது போன்ற நிகழ்வுகள், ஏன் ஏற்படுகின்றன?
அந்தப் பெண்களின் பெற்றோருக்கோ அல்லது மூதாதையருக்கோ இதுபோன்ற ஹார்மோன் பாதிப்புகள் இருந்தால், பரம்பரையாக அவர்களுக்கு தலைமுடி உதிர வாய்ப்புண்டு என்கிறார்கள், மேலைமருத்துவர்கள். ஆண்ட்ரோஜெனிக் அலோபெசியா எனும் இந்த பாதிப்புக்கு, மினாக்சிடில் எனும் லோஷனைத் தலையில் தடவிவர, முடி உதிர்தல் கட்டுப்படும் என்கின்றனர், மேலை மருத்துவ நிபுணர்கள்.

தலைமுடியை இறுக்கமாகப் பின்னுவது.

தலைமுடியை இறுக்கமாகப் பின்னுவது.தலைமுடியை இறுக்கமாகப் பின்னினால் தானே, முடி நெற்றியில் விழாமல் இருக்கும், இல்லையென்றால், வாகனத்தில் செல்வது முதல், அலுவலகத்தில் வேலை செய்வது வரை, எல்லா நேரமும், முடியைக்கையால் சரிசெய்து கொண்டேயல்லவா, இருக்க வேண்டியிருக்கும், என நாம் எண்ணலாம்.
முன்னெல்லாம், தலைமுடியை இறுக்கி சடை பின்னிவிட்டால், மாலை வீட்டுக்கு வந்தால்கூட, சடையை அவிழ்ப்பது சிரமமாக இருக்கும். அப்போதெல்லாம் முடிஉதிர்வு இருக்காதா? என்றும் சிலர் கேட்கக்கூடும். நிச்சயம் முடி உதிராது.

ஈரமான கூந்தல்ஈரமான கூந்தல்

முதல் காரணம், ஈரத்தலையில் அவர்கள் சடை பின்ன மாட்டார்கள், தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்க்காமல் ஒருநாளும் இருக்கமாட்டார்கள். சில கிராமங்களில் தலைக்கு இன்னும், வேப்பெண்ணைதான். எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம், இன்றைய பரபரப்பு, மனஅழுத்தம், ஜங்க் உணவுகள் மற்றும் ஸ்மார்ட் மொபைல்கள் அன்று இல்லை. அதனால்தான், அவர்களின் தலைமுடி பாதியுடல்வரை, வளர்ந்திருக்கும்.

ஆயில் அப்ளைஆயில் அப்ளை

நாகரிக வளர்ச்சியில் இப்போது கழுத்து வரை இருக்கும் முடிகூட உதிர்ந்து, முடியே இல்லாதத் தலையாகிவிடுமோ என்ற அச்சம்தான், இன்று பல தாய்மார்களுக்கும் தங்கள் பிள்ளைகளைக் கண்டபின், ஏற்படுகிறது. தற்காலத்தில், தலைக்கு எண்ணை தடவாமல், அவசரமாகக்குளித்தபின், தலையை வாரி, சிறு சடை போலவோ அல்லது கொண்டைபோலவோ போட்டுக்கொண்டு, அதற்கு சப்போர்ட்டாக, இரப்பர்பேன்ட் அல்லது பிளாஸ்டிக் கிளிப் இட்டுக் கொள்ளும் போது, தலைமுடி வேர்க்காலிலிருந்து இழுக்கப்பட்டு, பின்னர் அவிழ்க்கும்போது, முடி உதிர்கிறது.
இதுபோல முடியுதிரும்போது, அதைக்கண்டு, மனஅழுத்தத்துக்கு ஆளாகும் பெண்களின் எண்ணிக்கை, மிக அதிகம். அழுத்தி தளர்வாக தலைமுடிகளைப் பின்னி, அவ்வப்போது மீண்டும் பின்னிக் கொள்வதன் மூலம், தலைமுடி உதிர்தல் குறையும். இதை தினசரி வழக்கமாக்கும்போது, அந்தநேரங்களில், மொபைல் ஈடுபாடு குறையும். இதன்மூலம் மனதை இலகுவாக்கிக் கொள்ள ஏதுவாகும். ஸ்டைலுக்காக அல்லது புதுஃபேஷன் என்று தலையை அலங்கோலமாக்கினாலும், தலைமுடிகள் அதிகம் உதிரும்.

ஹேர் டிரையர்ஹேர் டிரையர்

தலைமுடிகளின் ஈரத்தை உலரவைக்க, ஹேர்டிரையர் எனும் மின்உலர்த்தியை அதிகம் உபயோகிப்பது. ஈரத்தலையை சீவி, முடிஉதிர்வது ஒருசிலருக்கு பிரச்னை என்றால், குளித்தவுடன் தலைஈரமாக இருப்பதால், பருத்தித்துண்டால் துவட்டி, ஈரத்தைப்போக்காமல், ஹேர் டிரையரை தலையில் வைத்து, ஈரத்தைப் போக்குவது.
தலைமுடி அதிகம் உதிர, இந்த ஒரு பழக்கமும் காரணம். செயற்கை வெப்பத்தினால், முடியிலுள்ள இயற்கை ஈரப்பசை உலர்ந்து, மயிர்க்கால்களின் பிடிப்பை இழந்து, முடியை உறுதியற்றதாக்கி, எளிதில் உடையக் கூடியதாகிறது.
இதனால் தினமும் ஏராளமான முடிகள் உதிர்ந்து, விரைவில் தலைமுடியைத் தலையில் தேடும் நிலை ஏற்பட, வாய்ப்புண்டு.

அதீத முடி உதிர்வுஅதீத முடி உதிர்வு

அடிக்கடி ஷாம்பூ மற்றும் தலைமுடி எண்ணெய்களை மாற்றிக் கொண்டிருப்பது.
நம்மில் பலர் செய்யும் மற்றொரு தவறு, அடிக்கடி ஷாம்பூ மற்றும் ஹேர் ஆயிலை மாற்றிக்கொண்டிருப்பது. தலைமுடி உதிர்வுக்காக இதைச்செய்கிறோம் என்று கூறினாலும், அடிக்கடி மாற்றும் இவற்றிலுள்ள பல்வேறு வேதிப் பொருட்களே, தலையின் PH வேதித் தன்மையைப் பாதித்து, முடி உதிர்வை அதிகரித்து விடுகிறது.

முடி பிடுங்குதல்முடி பிடுங்குதல்

ட்ரிசோடில்லோ மேனியா எனும் முடியைப் பிடுங்கும் வியாதி. Trichotillo Mania
மனநல பாதிப்புள்ள சிலர், தங்களையறியாமல் தலைமுடிகளை அடிக்கடி, மயிர்க்கால்களில் இருந்து பிய்த்து எடுத்துக்கொண்டே, இருப்பார்கள். இதன்மூலம், மயிர்க்கால்கள் சேதப்படுவதோடு மட்டுமல்ல, அங்கே மீண்டும் முடி முளைப்பது அரிதாகிவிடும். அத்துடன் தலையெங்குமுள்ள காயங்கள், வலியை ஏற்படுத்தும். அதிகமாகப் பெண்களைப் பாதிக்கும் இந்த பழக்கத்தைத் தடுக்க, மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது, மிக அவசியமாகும்.

மெனோபாஸ்மெனோபாஸ்

முடியைப் பிடுங்க உந்துதல் ஏற்படும் சமயங்களில், கைகளை இறுகப் பற்றிக் கொள்வதும், வேறு காரியங்களில் மனதை செலுத்துவதும் நம்மால் முடியாத ஒன்றாக இருந்தாலும், மருத்துவர் அந்தப் பழக்கத்தை மாற்ற, தீர்வுகள் அளிப்பார். இவற்றைத் தவிர, ஹார்மோன் பாதிப்பால், பெண்களின் மெனோபாஸ் பருவத்திலும் முடி உதிர்தல் அதிகரிக்கும்.
கர்ப்ப காலம்

கர்ப்ப காலம்

பெண்கள் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு, பிரசவ நேரத்தில் அதிகமாக இருந்த தலைமுடி சில மாதங்களில் சட்டெனக் குறையத் தொடங்கும். ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு பிரவச காலத்தில் அதிகரிப்பதே, தலைமுடி அதிகம் வளரக் காரணம். இந்த ஹார்மோன் சுரப்பு, குழந்தை பெற்ற சில மாதங்களில் குறையும்போது, தலைமுடி உதிர ஆரம்பிக்கும். சத்தான உணவுகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை அதிகம் உணவில் எடுத்துக்கொள்ள, முடி உதிர்வு கட்டுப்படும்.

ஊமத்தை

ஊமத்தை

இதையும் மீறி, முடி உதிர்ந்து வழுக்கையாகி விட்டதென்றால், பூசணிக் கொழுந்து இலைகளை சாறெடுத்துத் தலையில் தடவி வரலாம். ஊமத்தை பிஞ்சை அரைத்து முடி உதிர்ந்த இடத்தில் தடவி குளித்துவர, நிவாரணம் கிடைக்கும்.

Avoid coal, petrol and diesel .. Only then can we prevent global warming

சென்னை: அனல் மின் நிலையம், போக்குவரத்து ஆகிய துறைகளே புவிவெப்பமயமாதலுக்கு முக்கிய காரணங்கள் என பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் வெற்றிச் செல்வன் தெரிவித்துள்ளார். பூவுலகின் நண்பர்கள் (Friends of Earth)இயக்கமானது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிரச்சினைகளை கையில் எடுத்து அதற்காக போராடி வருகிறது. எட்டு வழிச் சாலை, சுற்றுச்சூழல் தாக்க வரைவு, காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம், காலநிலை மாற்றம் உள்ளிட்டவைகளுக்காக குரல் கொடுத்து வருகிறது. Exclusive: Poovulagin Nanbargal movement Vetriselvan says about Global warming இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் வெற்றிச் செல்வன் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டி கேள்வி பதில் வடிவில்: கே: சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட 12 நகரங்கள் 3 மீட்டர் ஆழத்திற்கு கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து உங்கள் கருத்து என்ன ப: 1980 ஆம் ஆண்டுகளில் இருந்தே புவி வெப்பமயமாதலை கேள்விப்பட்டு வருகிறோம். பூமி சூடாகி வருகிறது. இதன் காரணமாக காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. புவி வெப்பமாவதன் காரணமாக ஆர்டிக் மற்றும் அன்டார்டிக் பகுதிகளில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. இதனால் தண்ணீரின் அளவு அதிகமாகிறது. இதனால் கடல் மட்டத்தின் அளவானது உயர்ந்து கொண்டே இருக்கிறது. இது போல் நிகழும் போது கடல் மட்டத்தை விட உயரம் குறைவாக உள்ள நிலப்பகுதிகள் உள்ளே போய்விடும். இதுதான் இயல்பு, எனவே தாழ்வாக இருக்கும் பகுதிகள் கடலுக்குள் செல்ல வாய்ப்பிருக்கிறது. நாசாவின் ஆய்வானது முதல் ஆய்வு அல்ல. அதற்கு முன்பாகவே பல்வேறு ஆய்வுகள் வெளியாகியுள்ளன. அண்மையில் 2018ஆம் ஆண்டு Central Climatic Centre என்ற அமைப்பு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். இந்த அறிக்கையில் 2030 - 2040 ஆம் ஆண்டுக்குள் கடலின் நீர் மட்டம் உயர்வதால் பல பகுதிகள் மூழ்கும் ஆபத்து உள்ளதாக சொல்லியுள்ளார்கள். எந்த காலகட்டத்தில் எந்த அளவுக்கு இதெல்லாம் நடக்கும் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வந்துள்ளன. நாசா இந்த நூற்றாண்டின் முடிவில் இது போல் நிகழும் என சொல்லியுள்ளது. பூமியின் தட்பவெப்பநிலையி்ல எந்த அளவுக்கு மாற்றம் ஏற்படுகிறது, அதன் காரணமாக பனி எந்த அளவுக்கு உருக்கம் இருக்கும், இதன் காரணமாக கடல் மட்டம் எந்த அளவுக்கு இருக்கும் என சொல்லியுள்ளது. பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் கடல் மட்டம் உயர்வு என பார்த்தால் 3 அடி முதல் 7 அடி வரை உயர வாய்ப்புள்ளது. அப்படி நிகழும் பட்சத்தில் பல நிலப்பரப்புகள் கடலுக்குள் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்டவை எல்லாம் கடலில் மூழ்கக் கூடிய ஆபத்து இருக்கும் பகுதிகள். கூடுதலாக டெல்டா பகுதிகள், கிருஷ்ணா கோதாவரி பகுதிகள் உள்ளிட்ட டெல்டா பகுதிகள் இவையெல்லாமும் கடலுக்குள் மூழ்குவதற்கான ஆபத்து இருக்கின்றன. இந்த ஆபத்தை எதிர்நோக்கிதான் சென்று கொண்டிருக்கிறோம். கே: புவி வெப்பமயமாதலை தடுக்க ஐநா எடுக்கும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறதா ப: 1980 களிலேயே புவி வெப்பயமாதல் குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துவிட்டார்கள். 1991 ஆம் ஆண்டு பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக ஐநா ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கினார்கள். பருவநிலை மாற்றத்திற்கான ஐ நா குழுவின் ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக 1997 இல் கைட்டோ புரோட்டோகால் என்ற ஒப்பந்தம் வந்தது. இந்த இரு ஒப்பந்தங்களும், "காலநிலை மாற்றம் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதை தடுக்க நிறைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாடுகள் தாமாக முன் வந்து பசுமை இல்ல வாயுக்களான கார்பன், மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு போன்ற வாயுக்களின் வெளியேற்றத்தை குறைக்க வேண்டும்" என்ற அளவில் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இந்தியா அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அமெரிக்கா தொடக்கத்திலிருந்தே இந்த ஒப்பந்தத்தை எதிர்த்துக் கொண்டுதான் வந்தது. இந்த இரு ஒப்பந்தங்களுமே காலாவதியான பிறகு 2016 ஆம் ஆண்டு பாரீஸில் இன்னொரு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. மற்ற இரு ஒப்பந்தங்களும் வெறும் ஆலோசனைகளை மட்டுமே சொல்லியுள்ளன. ஆனால் இந்த பாரீஸ் ஒப்பந்தமானது இலக்கை நிர்ணயித்தது. இதில் "பூமியின் தட்பவெப்பநிலை கண்டிப்பாக உயரக் கூடும். அதை எந்தளவுக்கு உயரவிடலாம் என்பதை பார்க்கும் போது 1.5 டிகிரி சென்டிகிரேட் அளவுக்கு உயர்ந்தால் நம்மால் சமாளிக்க முடியும். இதுவும் ஆபத்தானதுதான், எனினும் உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகள் இருந்தது. இனி வரும் காலங்களில் பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸுக்கு உயரத்தான் போகிறது. அதற்குள் வெப்பநிலையை வைத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இது 2 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் சென்றால் மிகவும் ஆபத்தாகிவிடும்" என அந்த ஒப்பந்தம் சொல்லியதோடு அதற்கு நாம் என்னவெலாம் செய்ய வேண்டும் என்பதையும் அந்த ஒப்பந்தம் சொல்லியுள்ளது. இன்னும் உள்ள 10 ஆண்டுகளில் உலக நாடுகளில் இருந்து வெளியேறக் கூடிய பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை 50 சதவீதமாக குறைக்க வேண்டும். 2050 ஆம் ஆண்டுக்குள் அதை ஜீரோவாக்க வேண்டும். கார்பன் வெளியேற்றமே இருக்கக் கூடாது. அப்படியான ஒரு நிலை வந்தால் மட்டும்தான் பூமியின் வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அளவுக்கு நம்மால் கட்டுப்படுத்த முடியும். இதை பின்பற்றுமாறு ஐக்கிய நாடுகள் முன் வைக்கிறார்கள். இந்த ஆலோசனைகளின்படி உலக நாடுகள் நடந்து கொள்கிறார்களா என்றால் ஏமாற்றமே விஞ்சுகிறது. கொரோனா காலத்தில் கூட பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் அதிகமாகவே உள்ளது. கே: புவிவெப்பமயமாதலுக்கு எதிராக மத்திய மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கை பலனை தருகிறதா? ப: இந்தியாவை பொருத்தமட்டில் 2016 ஆம் ஆண்டு பாரீஸ் ஒப்பந்தத்தில் நாம் கையெழுத்திட்ட பின்னர் பசுமை இல்ல வாயுக்களை இந்த அளவுக்குத்தான் வெளியிடுவோம் என ஒவ்வொரு நாடுகளும் அளவை நிர்ணயித்துக் கொள்ளலாம். அந்த வகையில் இந்தியா 2030-ஆம் ஆண்டுக்குள் 30 சதவீதம் அளவுக்கு பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை குறைப்போம் என இந்தியா வாக்குறுதி அளித்தது. புவி வெப்பமயமாதலுக்கு அடிப்படை காரணமாக இருப்பதே நிலக்கரிதான். அப்படியென்றால் நிலக்கரியை சார்ந்திருக்கக் கூடிய அனல்மின் நிலையங்களில் இருந்து வெளியே வர வேண்டும். இதற்கு மாற்று என்றால் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்தான் (renewable energy). இந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி பயணம் செய்வதற்கான முன்னெடுப்புகளை இந்தியா செய்து கொண்டிருக்கிறது. மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்த போது புவிவெப்பயமாதல் பிரச்சினையை எதிர்கொள்ள 12 திட்டங்களை அவர்கள் வகுத்தார்கள். இதையடுத்து வந்த பாஜக அரசு 2 திட்டங்களை அந்த 12 திட்டங்களுடன் சேர்த்தது. இதை தவிர்த்து கூடுதல் செயல்பாடுகள் இந்தியாவில் இல்லை. இது போதாது. 2019 ஆம் ஆண்டு ஐஐடி கான்பூர் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டார்கள். அதில் ஒட்டுமொத்தமாக காலநிலை மாற்றம் பிரச்சினையால் இந்தியாவில் எந்த மாதிரியான பிரச்சினைகள் உருவாகும் என்பதை கூறியுள்ளார்கள். அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய அளவில் புவியின் வெப்பம் 1 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்கிறார்கள். இந்தியாவுக்கான பருவநிலைக்கான மாதிரி என்பதே கிடையாது என்கிறது அந்த ஆய்வு. இந்தியாவில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணிகளை செய்கிறோம். இவையும் பூமி வெப்பமயமாதலுக்கானதுதான். இந்தியாவில் புவி வெப்பமயமாதலுக்கு காரணமாக இருப்பது தெர்மல் மின் நிலையம், போக்குவரத்து ஆகிய இரு துறைகள்தான். இந்த இரு துறைகளிலிருந்து பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை குறைக்க வேண்டும். நிலக்கரியை சார்ந்துள்ள மின் உற்பத்தியை முற்றிலும் தடை செய்ய வேண்டும். ஹைட்ரோகார்பன், மீத்தேன், பெட்ரோலியம், ஆயில் கேஸ் ஆகிய தொழில் துறைகளில் இருந்து நாம் வெளியே வர வேண்டும். போக்குவரத்து என்பதை முழுக்க முழுக்க எலக்ட்ரிக்கல் வாகனங்களை சார்ந்து இருக்க வேண்டும். இதையெல்லாம் நாம் செய்ய இன்னும் தயாராக இல்லை. நமது உற்பத்தி என்பது சூழலியல் சார்ந்து பருவநிலை மாற்றத்தை அடிப்படையாக கொண்டு இருக்க வேண்டும். அதிக மழை, வெள்ளம், வறட்சி, வெப்பம், குளிர் ஆகியவற்றை தடுக்க இயற்கை சார்ந்த பகுதிகளை (Ecologically sensitive areas)பாதுகாக்க வேண்டும் என ஐநா அறிவுறுத்துகிறது. மேற்கு தொடர்ச்சி மலைகள், அலையாத்தி காடுகள், மன்னார் வளைகுடா பகுதியில் பவள பாறைகள், ஈரநிலங்கள் உள்ளிட்டவை நமக்கு அரணாக இருந்து நமக்கான பாதிப்புகளை குறைக்கும். ஈஐஏ 2020, சூழலுக்கு எதிரான உற்பத்திகள் எல்லாம் வெப்பநிலை உயருவதை தடுப்பதற்கு முரணாக உள்ளது. வரும் பட்ஜெட்டில் காலநிலை மாற்றத்தை காக்க ஏதேனும் நிதி ஒதுக்கீடு, கொள்கைகளை கொண்டு வருகிறார்களா என பார்ப்போம் என்றார் வெற்றிச் செல்வன்.