Breaking News

குடல்வால் இருப்பதற்கான அறிகுறிகள் இதுதான்... என்னென்ன பரிசோதனைகள் செய்யணும்?!!

appendicitis signsஉங்கள் தொப்புள் பகுதியில் தீவிர வலியை என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா?தொடர்ச்சியான வாந்தி ஏற்படுகிறதா? சரியாக சாப்பிட முடியாமல் அவதிப்படுகிறீர்களா இது போன்ற பிரச்சினைகள் இருந்தால் உங்களுக்கு குடல் வால் அழற்சி ஏற்பட்டுள்ளது.
இந்த குடல் வால் அழற்சி சிறியவர்கள் பெரியவர்கள் வரை யாரை வேண்டுமென்றாலும் பாதிக்கலாம்.


குடல் வால் அழற்சி (அப்பன்டீஸ்)

குடல் வால் அழற்சி (அப்பன்டீஸ்)சிறுகுடலும் பெருங்குடலும் சந்திக்கின்ற பகுதியில் வால் போன்ற பகுதி இருக்கும். இது தான் குடல் வால் என்று அழைக்கப்படுகிறது. இந்த வால் பகுதியில் ஏற்படும் அழற்சியை தான் குடல் வால் அழற்சி என்று கூறுகின்றனர். இந்த வால் பகுதி அப்படியே அழற்சியால் தீவிரமாக பாதிக்கப்பட்டு பிறகு அங்கே வீக்கத்தை உண்டாக்கி அடைப்பை ஏற்படுத்தி விடும். இதனால் அங்கே இரத்தம் ஓடுவது தடைபட்டு விடும். அப்படியே படிப்படியாக பாதிப்படைந்து வீக்கம் வைத்து சீழ் அடைந்து விடும்.
அமெரிக்க தேசிய மருத்துவ நிறுவனங்கள் கருத்துப்படி குடல்வால் அழற்சி முக்கிய பிரச்சனைகளுள் ஒன்றாகும். இதனால் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்படுகிறது. 10 பேர்களில் 1 நபர்கள் இந்த பிரச்சினையை சந்தித்து வருகின்றன என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது எந்த வயதினரையும் தாக்கும் பிரச்சினையாக இருந்தாலும் குறிப்பாக 10-30 வயதுடைய இளைஞர்களை அதிகளவில் தாக்குகிறது.

காரணங்கள்காரணங்கள்

குடல் வால் அழற்சி ஏற்பட சரியான காரணங்கள் இதுவரை தெரியவில்லை. இது பொதுவாக தனித்துவமான சில பொருட்களால் குடல் வால் தடைபடுகிறது. பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ் மற்றும் பாராசைட்ஸ் போன்ற கிருமிகள் குடல் வாலில் அழற்சியை ஏற்படுத்தி அங்குள்ள திசுக்களை வீக்கமடையச் செய்து குடல் வால் அழற்சியை ஏற்படுத்துகின்றன. இதனால் குடல் வால் பகுதியே சேதமடைய ஆரம்பித்து விடும்.

அறிகுறிகள்அறிகுறிகள்

குடல் வால் அழற்சி ஏற்பட்ட 4-48 மணி நேரத்திற்குள் அதன் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்து விடும்.முந்தைய அறிகுறிகளாக
தொப்புள் மற்றும் அடிவயிற்று பகுதியில் தீவிர வலி
இதர அறிகுறிகள்
குமட்டல் மற்றும் வாந்தி
பசியின்மை
லேசான காய்ச்சல்
வயிறு வீக்கம், வயிறு உப்புசம்
மலச்சிக்கல்
வயிற்றுப் போக்கு
வலியுடன் இருமல்
போன்றவை ஏற்படும்.
இந்த அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடலாம். உங்களுக்கு குடல் வால் அழற்சி இருப்பதாக நினைத்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் இதை தாமதம் செய்தால் அந்த சிவந்த வால் பகுதி வெடித்து உயிருக்கே ஆபத்தாகி விடும் என்று மருத்துவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எப்பொழுது மருத்துவரை அணுக வேண்டும்?எப்பொழுது மருத்துவரை அணுக வேண்டும்?

காய்ச்சல் அல்லது குமட்டல் அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் உடனே மருத்துவரை சந்தியுங்கள். 4 மணி நேரத்திற்கு மேல் இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே தாமதிக்காமல் மருத்துவரிடம் சென்று விடுங்கள். குடல் வால் அழற்சி யின் அறிகுறிகளை கண்டறிவது மிகவும் சிரமம். ஏனெனில் இது மற்ற பாதிப்பின் அறிகுறிகளைப் போலவே இருக்கும். மலச்சிக்கல், குடல் பிரச்சினை, சிறுநீர் தொற்று, எரிச்சலுடன் மலம் கழித்தல் போன்ற அறிகுறிகள் மாதிரியே இருக்கும்.

பரிசோதனைகள்பரிசோதனைகள்

எனவே இதை கண்டறிய மருத்துவர்கள் நிறைய பரிசோதனை களை மேற்கொள்வார்கள். மருத்துவர்கள் வயிற்றில் கையை வைத்து அமுக்கி பார்த்து குடல் தசைகளின் இயல்பை கணித்தல்





இரத்த பரிசோதனைஇரத்த பரிசோதனை

இரத்த பரிசோதனை மூலம் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை பார்த்து அழற்சியை கண்டறிவர்.
சிறுநீர் பரிசோதனை
சிறுநீர் பரிசோதனை மூலம் எதாவது சிறுநீர் கற்கள், சிறுநீர் தொற்று உள்ளதா போன்றவற்றை பார்ப்பார்கள்
எக்ஸ்ரே
எக்ஸ்ரே மூலம் அடிவயிற்று பகுதியை படம் எடுத்து பார்த்தல்.
CT ஸ்கேன்
CT ஸ்கேன் அடிவயிற்று பகுதியில் ஏற்படும் வலியை கண்டறிய உதவுகிறது.
இடுப்பு அழற்சி தொற்று
இடுப்புப் பகுதியை பரிசோதனை செய்வதன் மூலம் எதாவது இடுப்பு அழற்சி நோய் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிவர்.

கருக்குழாய் கர்ப்பம்கருக்குழாய் கர்ப்பம்

கர்ப்ப பரிசோதனை மூலம் எதாவது கருக்குழாயில் கர்ப்பம் தரிப்பு ஏற்பட்டுள்ளதா போன்றவற்றை பரிசோதனை செய்து முடிவுக்கு வருவர்.
24 மணி நேரம் உங்களுக்கு ஏற்பட்டுள்ள அறிகுறிகளை மருத்துவர் கவனிப்பார். அறிகுறிகள் மாறியுள்ளதா அல்லது குறைவு அல்லது அதிகமாகி உள்ளதா என்பதை கண்காணிப்பார்கள்.



சிகிச்சைசிகிச்சை

உங்களுக்கு குடல் வால் அழற்சி இருந்தால் அதை அறுவை சிகிச்சை செய்து ரிமூவ் செய்ய மருத்துவர் பரிந்துரைப்பார். இந்த அறுவை சிகிச்சைக்கு பெயர்

அப்பன்டெக்டோமி





அப்பன்டெக்டோமி
இது குடல் வால் சிதைவடைவதை தடுக்கிறது. இதை எளிதாக லேப்ரோஸ்கோபி முறை மூலமே செய்து விடலாம். வலி குறைந்த இந்த சிகச்சை சீக்கிரமாகவும் குணமடைந்து விடும். அறுவை சிகிச்சைக்கு முன் அழற்சியை தடுக்க ஆன்டி பயோடிக் எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. எனவே அறுவை சிகிச்சை நேரத்தில் எதுவும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது. குடல் வாலில் சீழ் எதாவது ஏற்பட்டு இருந்தால் நன்றாக துடைத்து விட்டு அறுவை சிகிச்சை செய்யப்படும். அப்பன்டெக்டோமி செய்த பிறகு 2-6 வாரங்கள் ஆகும் நம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப. இந்த நேரங்களில் உடம்பை அதிகமாக அசைக்க கூடாது. மருத்துவரை அணுகி அடிக்கடி செக்கப் செய்து கொள்ள வேண்டும்.


ஆன்டி பயோடிக்ஆன்டி பயோடிக்

குடல் வால் சிதைவடையாத சமயத்தில் வெறும் சீழை மட்டும் நீக்க ஆன்டி பயாடிக் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகிறது. அறுவை சிகிச்சையை ஒப்பிடும் போது இதற்கு குறைவான பணம் மட்டுமே தேவைப்படுகிறது. ஆனால் ஆன்டி பயோடிக் மட்டும் இந்த குடல் வால் அழற்சியை போக்க போதும் என்பதற்கு எந்த அறிவியல் சான்றும் இல்லை. இந்த ஆன்டி பயோடிக் மட்டும் உள்ள சிகச்சை திரும்பவும் குடல் வால் அழற்சி ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே இதற்கு அறுவை சிகிச்சை தான் சிறந்தது என்கின்றனர் டாக்டர்கள்.

எது சரியான முறைஎது சரியான முறை

பொதுவாக குடல் வால் அழற்சிக்கு அப்பன்டெக்டோமி தான் மேற்கொள்ளப்படுகிறது. அழற்சி அடைந்த குடல் வாலை நீக்குவது தான் சிறந்தது. சேதமடைய போகும் குடல் வாலை நீக்குவதால் நம் குடலின் இயக்கத்தில் எந்த மாறுபாடும் ஏற்படாது. ஆனால் நீங்கள் குடல் அழற்சியை அப்படியே வைத்து இருந்தால் ஏராளமான பாதிப்புகளை சந்திக்க நேரிடும். மற்றொரு பயன் இந்த அறுவை சிகிச்சை செய்த பிறகு மறுபடியும் குடல் வால் அழற்சி ஏற்படும் அபாயம் கிடையாது. எனவே உங்கள் மருத்துவரின் ஆலோசனை பேரில் இதை செய்து கொள்ளுங்கள்.
உணவு முறை


உணவு முறை

குடல் வால் அழற்சியை தடுக்க சில உணவு முறைகளையும் கையாளுங்கள். அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஓட்ஸ், கோதுமை, பழுப்பு அரிசி, பீன்ஸ், பழங்கள் போன்றவற்றை சேருங்கள். மேற்கண்ட அறிகுறிகளை அலட்சியமாக விட்டு விடாதீர்கள். உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று கொள்வது நல்லது.

                                                                                               நன்றி: தமிழ் போல்ட் ஸ்கை

Avoid coal, petrol and diesel .. Only then can we prevent global warming

சென்னை: அனல் மின் நிலையம், போக்குவரத்து ஆகிய துறைகளே புவிவெப்பமயமாதலுக்கு முக்கிய காரணங்கள் என பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் வெற்றிச் செல்வன் தெரிவித்துள்ளார். பூவுலகின் நண்பர்கள் (Friends of Earth)இயக்கமானது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிரச்சினைகளை கையில் எடுத்து அதற்காக போராடி வருகிறது. எட்டு வழிச் சாலை, சுற்றுச்சூழல் தாக்க வரைவு, காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம், காலநிலை மாற்றம் உள்ளிட்டவைகளுக்காக குரல் கொடுத்து வருகிறது. Exclusive: Poovulagin Nanbargal movement Vetriselvan says about Global warming இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் வெற்றிச் செல்வன் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டி கேள்வி பதில் வடிவில்: கே: சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட 12 நகரங்கள் 3 மீட்டர் ஆழத்திற்கு கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து உங்கள் கருத்து என்ன ப: 1980 ஆம் ஆண்டுகளில் இருந்தே புவி வெப்பமயமாதலை கேள்விப்பட்டு வருகிறோம். பூமி சூடாகி வருகிறது. இதன் காரணமாக காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. புவி வெப்பமாவதன் காரணமாக ஆர்டிக் மற்றும் அன்டார்டிக் பகுதிகளில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. இதனால் தண்ணீரின் அளவு அதிகமாகிறது. இதனால் கடல் மட்டத்தின் அளவானது உயர்ந்து கொண்டே இருக்கிறது. இது போல் நிகழும் போது கடல் மட்டத்தை விட உயரம் குறைவாக உள்ள நிலப்பகுதிகள் உள்ளே போய்விடும். இதுதான் இயல்பு, எனவே தாழ்வாக இருக்கும் பகுதிகள் கடலுக்குள் செல்ல வாய்ப்பிருக்கிறது. நாசாவின் ஆய்வானது முதல் ஆய்வு அல்ல. அதற்கு முன்பாகவே பல்வேறு ஆய்வுகள் வெளியாகியுள்ளன. அண்மையில் 2018ஆம் ஆண்டு Central Climatic Centre என்ற அமைப்பு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். இந்த அறிக்கையில் 2030 - 2040 ஆம் ஆண்டுக்குள் கடலின் நீர் மட்டம் உயர்வதால் பல பகுதிகள் மூழ்கும் ஆபத்து உள்ளதாக சொல்லியுள்ளார்கள். எந்த காலகட்டத்தில் எந்த அளவுக்கு இதெல்லாம் நடக்கும் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வந்துள்ளன. நாசா இந்த நூற்றாண்டின் முடிவில் இது போல் நிகழும் என சொல்லியுள்ளது. பூமியின் தட்பவெப்பநிலையி்ல எந்த அளவுக்கு மாற்றம் ஏற்படுகிறது, அதன் காரணமாக பனி எந்த அளவுக்கு உருக்கம் இருக்கும், இதன் காரணமாக கடல் மட்டம் எந்த அளவுக்கு இருக்கும் என சொல்லியுள்ளது. பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் கடல் மட்டம் உயர்வு என பார்த்தால் 3 அடி முதல் 7 அடி வரை உயர வாய்ப்புள்ளது. அப்படி நிகழும் பட்சத்தில் பல நிலப்பரப்புகள் கடலுக்குள் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்டவை எல்லாம் கடலில் மூழ்கக் கூடிய ஆபத்து இருக்கும் பகுதிகள். கூடுதலாக டெல்டா பகுதிகள், கிருஷ்ணா கோதாவரி பகுதிகள் உள்ளிட்ட டெல்டா பகுதிகள் இவையெல்லாமும் கடலுக்குள் மூழ்குவதற்கான ஆபத்து இருக்கின்றன. இந்த ஆபத்தை எதிர்நோக்கிதான் சென்று கொண்டிருக்கிறோம். கே: புவி வெப்பமயமாதலை தடுக்க ஐநா எடுக்கும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறதா ப: 1980 களிலேயே புவி வெப்பயமாதல் குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துவிட்டார்கள். 1991 ஆம் ஆண்டு பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக ஐநா ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கினார்கள். பருவநிலை மாற்றத்திற்கான ஐ நா குழுவின் ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக 1997 இல் கைட்டோ புரோட்டோகால் என்ற ஒப்பந்தம் வந்தது. இந்த இரு ஒப்பந்தங்களும், "காலநிலை மாற்றம் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதை தடுக்க நிறைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாடுகள் தாமாக முன் வந்து பசுமை இல்ல வாயுக்களான கார்பன், மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு போன்ற வாயுக்களின் வெளியேற்றத்தை குறைக்க வேண்டும்" என்ற அளவில் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இந்தியா அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அமெரிக்கா தொடக்கத்திலிருந்தே இந்த ஒப்பந்தத்தை எதிர்த்துக் கொண்டுதான் வந்தது. இந்த இரு ஒப்பந்தங்களுமே காலாவதியான பிறகு 2016 ஆம் ஆண்டு பாரீஸில் இன்னொரு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. மற்ற இரு ஒப்பந்தங்களும் வெறும் ஆலோசனைகளை மட்டுமே சொல்லியுள்ளன. ஆனால் இந்த பாரீஸ் ஒப்பந்தமானது இலக்கை நிர்ணயித்தது. இதில் "பூமியின் தட்பவெப்பநிலை கண்டிப்பாக உயரக் கூடும். அதை எந்தளவுக்கு உயரவிடலாம் என்பதை பார்க்கும் போது 1.5 டிகிரி சென்டிகிரேட் அளவுக்கு உயர்ந்தால் நம்மால் சமாளிக்க முடியும். இதுவும் ஆபத்தானதுதான், எனினும் உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகள் இருந்தது. இனி வரும் காலங்களில் பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸுக்கு உயரத்தான் போகிறது. அதற்குள் வெப்பநிலையை வைத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இது 2 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் சென்றால் மிகவும் ஆபத்தாகிவிடும்" என அந்த ஒப்பந்தம் சொல்லியதோடு அதற்கு நாம் என்னவெலாம் செய்ய வேண்டும் என்பதையும் அந்த ஒப்பந்தம் சொல்லியுள்ளது. இன்னும் உள்ள 10 ஆண்டுகளில் உலக நாடுகளில் இருந்து வெளியேறக் கூடிய பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை 50 சதவீதமாக குறைக்க வேண்டும். 2050 ஆம் ஆண்டுக்குள் அதை ஜீரோவாக்க வேண்டும். கார்பன் வெளியேற்றமே இருக்கக் கூடாது. அப்படியான ஒரு நிலை வந்தால் மட்டும்தான் பூமியின் வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அளவுக்கு நம்மால் கட்டுப்படுத்த முடியும். இதை பின்பற்றுமாறு ஐக்கிய நாடுகள் முன் வைக்கிறார்கள். இந்த ஆலோசனைகளின்படி உலக நாடுகள் நடந்து கொள்கிறார்களா என்றால் ஏமாற்றமே விஞ்சுகிறது. கொரோனா காலத்தில் கூட பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் அதிகமாகவே உள்ளது. கே: புவிவெப்பமயமாதலுக்கு எதிராக மத்திய மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கை பலனை தருகிறதா? ப: இந்தியாவை பொருத்தமட்டில் 2016 ஆம் ஆண்டு பாரீஸ் ஒப்பந்தத்தில் நாம் கையெழுத்திட்ட பின்னர் பசுமை இல்ல வாயுக்களை இந்த அளவுக்குத்தான் வெளியிடுவோம் என ஒவ்வொரு நாடுகளும் அளவை நிர்ணயித்துக் கொள்ளலாம். அந்த வகையில் இந்தியா 2030-ஆம் ஆண்டுக்குள் 30 சதவீதம் அளவுக்கு பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை குறைப்போம் என இந்தியா வாக்குறுதி அளித்தது. புவி வெப்பமயமாதலுக்கு அடிப்படை காரணமாக இருப்பதே நிலக்கரிதான். அப்படியென்றால் நிலக்கரியை சார்ந்திருக்கக் கூடிய அனல்மின் நிலையங்களில் இருந்து வெளியே வர வேண்டும். இதற்கு மாற்று என்றால் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்தான் (renewable energy). இந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி பயணம் செய்வதற்கான முன்னெடுப்புகளை இந்தியா செய்து கொண்டிருக்கிறது. மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்த போது புவிவெப்பயமாதல் பிரச்சினையை எதிர்கொள்ள 12 திட்டங்களை அவர்கள் வகுத்தார்கள். இதையடுத்து வந்த பாஜக அரசு 2 திட்டங்களை அந்த 12 திட்டங்களுடன் சேர்த்தது. இதை தவிர்த்து கூடுதல் செயல்பாடுகள் இந்தியாவில் இல்லை. இது போதாது. 2019 ஆம் ஆண்டு ஐஐடி கான்பூர் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டார்கள். அதில் ஒட்டுமொத்தமாக காலநிலை மாற்றம் பிரச்சினையால் இந்தியாவில் எந்த மாதிரியான பிரச்சினைகள் உருவாகும் என்பதை கூறியுள்ளார்கள். அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய அளவில் புவியின் வெப்பம் 1 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்கிறார்கள். இந்தியாவுக்கான பருவநிலைக்கான மாதிரி என்பதே கிடையாது என்கிறது அந்த ஆய்வு. இந்தியாவில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணிகளை செய்கிறோம். இவையும் பூமி வெப்பமயமாதலுக்கானதுதான். இந்தியாவில் புவி வெப்பமயமாதலுக்கு காரணமாக இருப்பது தெர்மல் மின் நிலையம், போக்குவரத்து ஆகிய இரு துறைகள்தான். இந்த இரு துறைகளிலிருந்து பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை குறைக்க வேண்டும். நிலக்கரியை சார்ந்துள்ள மின் உற்பத்தியை முற்றிலும் தடை செய்ய வேண்டும். ஹைட்ரோகார்பன், மீத்தேன், பெட்ரோலியம், ஆயில் கேஸ் ஆகிய தொழில் துறைகளில் இருந்து நாம் வெளியே வர வேண்டும். போக்குவரத்து என்பதை முழுக்க முழுக்க எலக்ட்ரிக்கல் வாகனங்களை சார்ந்து இருக்க வேண்டும். இதையெல்லாம் நாம் செய்ய இன்னும் தயாராக இல்லை. நமது உற்பத்தி என்பது சூழலியல் சார்ந்து பருவநிலை மாற்றத்தை அடிப்படையாக கொண்டு இருக்க வேண்டும். அதிக மழை, வெள்ளம், வறட்சி, வெப்பம், குளிர் ஆகியவற்றை தடுக்க இயற்கை சார்ந்த பகுதிகளை (Ecologically sensitive areas)பாதுகாக்க வேண்டும் என ஐநா அறிவுறுத்துகிறது. மேற்கு தொடர்ச்சி மலைகள், அலையாத்தி காடுகள், மன்னார் வளைகுடா பகுதியில் பவள பாறைகள், ஈரநிலங்கள் உள்ளிட்டவை நமக்கு அரணாக இருந்து நமக்கான பாதிப்புகளை குறைக்கும். ஈஐஏ 2020, சூழலுக்கு எதிரான உற்பத்திகள் எல்லாம் வெப்பநிலை உயருவதை தடுப்பதற்கு முரணாக உள்ளது. வரும் பட்ஜெட்டில் காலநிலை மாற்றத்தை காக்க ஏதேனும் நிதி ஒதுக்கீடு, கொள்கைகளை கொண்டு வருகிறார்களா என பார்ப்போம் என்றார் வெற்றிச் செல்வன்.