Breaking News

உங்க வீட்ல செல்வச் செழிப்பு அதிகரிக்க சில முக்கியமான குறிப்புகள்!!!

vastuகட்டிடக்கலையில் இந்துக்களால் பின்பற்றப்படும் ஒரு அறிவியல் சார்ந்த ஒரு பழம் பெரும் முறை வாஸ்து. வளிமண்டலத்தின் பல்வேறு ஆற்றலில் இருந்து உருவானது இந்த வாஸ்து என்று நம்பப்படுகிறது. வாஸ்துவின் மூலம் அமைதி, நேர்மறை அதிர்வுகள் மற்றும் செல்வச் செழிப்பு ஏற்படுவதாக உணரப்படுகிறது.
இன்றைய நாட்களில் பலரும் இந்த வாஸ்துவை நம்பத் தொடங்கி விட்டனர். வீடு அல்லது மனை வாங்கும்போது அல்லது வீடு கட்டும்போது வாஸ்து நிபுணர்களிடம் ஆலோசித்து அவர்களின் திட்டப்படி இன்று பலரும் தங்கள் வீட்டை கட்டுகின்றனர். அல்லது ஏற்கனவே கட்டிய வீடுகள புதுப்பிக்கின்றனர்.


வாஸ்துவாஸ்து

வாஸ்துவின் மீது உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா? வாஸ்து பரிந்துரைகள் உங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும் என்று நம்பிக்கை உள்ளவரா நீங்கள்? ஆம் என்றால் இந்த பதிவைத் தொடர்ந்து படியுங்கள். உங்கள் செல்வச் செழிப்பு அதிகரிக்க சில முக்கியமான குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பின்பற்றி உங்கள் செல்வச் செழிப்பை அதிகரிக்கலாம். வாருங்கள் அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்.


பணப்பெட்டிபணப்பெட்டி

நம் அனைவருக்கும் நம்முடைய வீட்டில் பணம் மற்றும் நகைகளை சேமித்து பாதுகாப்பாக வைக்கும் பழக்கம் உண்டு. ஒரு சிலர் வாஸ்துவைப் பின்பற்றாமல் தனக்கு ஏற்ற இடங்களில் இவற்றை பாதுகாப்பாக வைப்பார்கள். ஒரு சிலர் வாஸ்துபடி பணம் மற்றும் நகைகளை வைக்க வேண்டிய இடத்தில் வைப்பார்கள். வளங்கள் அதிகரிக்க, நல்ல பலன்கள் அதிகம் கிடைக்க, வெற்றிகள் அதிகரிக்க, செல்வம் இரட்டிப்பாக என்று இதற்குப் பல காரணங்கள் உண்டு. பணம், நகை மற்றும் விலைமதிப்பற்ற சொத்துகள் என்று எதுவாக இருந்தாலும் இதனை வாஸ்து படி எங்கு வைத்தால் அதிகமாக பெருகும் என்பதற்கு சில குறிப்புகள் உண்டு. அதனை இப்போது பார்க்கலாம்.

வடக்கு திசை வடக்கு திசை

வடக்கு திசை என்பது குபேரரின் திசையாகும். குபேரர் செல்வம் மற்றும் வளங்களின் கடவுள் ஆவார். வாஸ்துபடி, விலைமதிப்பான பொருட்களை வைக்கும் பணப் பெட்டியை வடக்கு திசை நோக்கி வைக்க வேண்டும். இப்படி செய்வதால் உங்கள் அதிர்ஷ்டம் மற்றும் செல்வம் இரட்டிப்பாகும் என்று நம்பப்படுகிறது.

தெற்கு திசையில் தெற்கு திசையில்

பணப் பெட்டியை வடக்கு திசையில் வைத்தாலும், அதன் கதவை தெற்கு திசை நோக்கி வைக்கக் கூடாது. வளங்களின் கடவுளான லக்ஷ்மி, தெற்கில் இருந்து வடக்கு நோக்கி செல்வதாக நம்பப்படுகிறது. ஆகவே அதிர்ஷ்டம் மற்றும் செல்வச் செழிப்பை அதிகரிக்க இந்த வாஸ்துவை பின்பற்றவும்.

கிழக்கு நோக்கிகிழக்கு நோக்கி

உங்கள் வீட்டின் லாக்கர் அல்லது பணப் பெட்டியை வடக்கு திசை நோக்கி வைக்க முடியாவிட்டால், கிழக்கு திசை நோக்கி வைக்கலாம். சொந்தமாக கடை வைத்து தொழில் செய்பவர்கள் அவர்கள் கடையில் பணப் பெட்டியை கிழக்கு திசை நோக்கி வைக்கலாம். பணம் பெரும் கேஷியர் தென்-மேற்கு திசை நோக்கி அமர்ந்தால் அவருடைய இடது பக்கம் பணப்பெட்டி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கிழக்கு திசை நோக்கி அமர்ந்தால், அவருடைய வலது பக்கம் பணப்பெட்டி இருக்க வேண்டும்.

நான்கு மூலைகளில் நான்கு மூலைகளில்

ஒரு அறையின் நான்கு மூலைகளில் எதாவது ஒன்றில் பணப்பெட்டியை வைக்க வேண்டாம். குறிப்பாக வட கிழக்கு, தென் கிழக்கு அல்லது தென் மேற்கு மூலையில் வைக்க வேண்டாம். உங்கள் பணப்பெட்டி வடக்கு திசை நோக்கி திறப்பதை போல் வைக்க வேண்டும். தெற்கு திசை நோக்கி வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதனால் துரதிர்ஷ்டம் ஏற்படுகிறது மற்றும் பணத் தட்டுப்பாடு ஏற்படுவதாகும் நம்பப்படுகிறது.

பூஜை அறையில் பூஜை அறையில்

வாஸ்து படி, பூஜை அறையில் பணப்பெட்டி அல்லது லாக்கரை வைக்க வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இதற்கான சரியான விளக்கம் கிடக்கவில்லை. ஒரு வேளை, உங்கள் படுக்கை அறையுடன் அல்லது உடை மாற்றும் அறையுடன் பூஜை அறையும் இணைக்கப்பட்டிருந்தால் அங்குள்ள வார்டுரோபில் அலல்து அலமாரியில் பணப்பெட்டியை வைத்துக் கொள்ளலாம்.

வாசலுக்குவாசலுக்கு

உங்கள் வீட்டின் கேட் அல்லது வாசல் கதவில் இருக்கும் பார்க்கும் போது உங்கள் பணப்பெட்டி தெரிந்தால், உங்கள் செல்வம் கரைந்து விடும். வாசல் கதவின் முன், லாக்கரை திறந்து பணத்தை எடுப்பதால், செல்வம் வாசல் தாண்டி வெளியில் போகும் என்று வாஸ்துவில் நம்பப்படுகிறது. அது நல்ல அறிகுறி இல்லை. மேலும், வாஸ்துபடி, பணப்பெட்டியை கழிவறை, குளியலறை, சமையலறை, பேஸ்மென்ட், மாடிப்படி, ஸ்டோர் ரூம் போன்றவற்றை நோக்கி வைக்கக் கூடாது.

பணப்பெட்டிய பராமரிப்புபணப்பெட்டிய பராமரிப்பு

தூய்மையான மற்றும் நன்றாக பராமரிக்கப்படும் இடத்தில் தான் செல்வம் சேரும். ஆகவே உங்கள் பணப்பெட்டியை எப்போது சுத்தமாக மற்றும் நல்ல முறையில் பாதுகாத்து வைக்க வேண்டும்.
உங்கள் வீட்டில் உள்ள பணப்பெட்டியின் உள்ளே வடக்கு திசையில் திருமகள் லக்ஷ்மி அமர்ந்த நிலையில் உள்ள உருவம் கொண்ட ஒரு வெள்ளி நாணயத்தை வைக்க வேண்டும்.
பணப்பெட்டியில் பணத்தை வைக்கும் போது எந்த ஒரு கோப்பு மற்றும் ஆவணத்துடன் இணைத்தும் வைக்க வேண்டாம். எப்போதும் உங்கள் பணப்பெட்டியை காலியாக வைக்க வேண்டாம். குறைந்த பட்சம் ஒரு ரூபாயாவது பணப்பெட்டியில் இருக்க வேண்டும்.
உங்கள் வீட்டின் முதல் மற்றும் கடைசி அறையில் பணப்பெட்டி இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வெண்டிலேடர் அல்லது ஜன்னல் அருகில் பணப்பெட்டியை வைக்க வேண்டாம். இப்படி இருப்பது, செல்வம் உங்கள் வீட்டை விட்டு வெளியில் சென்று விடும் என்பதைக் குறிக்கிறது.
நல்ல வெளிச்சமான மற்றும் நேர்மறை அதிர்வுகள் அதிகம் உள்ள அறையில் பணத்தை வைப்பதால் அது இரட்டிப்பாவதுடன் அதிர்ஷ்டமும் நிலைத்து இருக்கும் என்று வாஸ்துவின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

Avoid coal, petrol and diesel .. Only then can we prevent global warming

சென்னை: அனல் மின் நிலையம், போக்குவரத்து ஆகிய துறைகளே புவிவெப்பமயமாதலுக்கு முக்கிய காரணங்கள் என பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் வெற்றிச் செல்வன் தெரிவித்துள்ளார். பூவுலகின் நண்பர்கள் (Friends of Earth)இயக்கமானது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிரச்சினைகளை கையில் எடுத்து அதற்காக போராடி வருகிறது. எட்டு வழிச் சாலை, சுற்றுச்சூழல் தாக்க வரைவு, காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம், காலநிலை மாற்றம் உள்ளிட்டவைகளுக்காக குரல் கொடுத்து வருகிறது. Exclusive: Poovulagin Nanbargal movement Vetriselvan says about Global warming இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் வெற்றிச் செல்வன் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டி கேள்வி பதில் வடிவில்: கே: சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட 12 நகரங்கள் 3 மீட்டர் ஆழத்திற்கு கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து உங்கள் கருத்து என்ன ப: 1980 ஆம் ஆண்டுகளில் இருந்தே புவி வெப்பமயமாதலை கேள்விப்பட்டு வருகிறோம். பூமி சூடாகி வருகிறது. இதன் காரணமாக காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. புவி வெப்பமாவதன் காரணமாக ஆர்டிக் மற்றும் அன்டார்டிக் பகுதிகளில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. இதனால் தண்ணீரின் அளவு அதிகமாகிறது. இதனால் கடல் மட்டத்தின் அளவானது உயர்ந்து கொண்டே இருக்கிறது. இது போல் நிகழும் போது கடல் மட்டத்தை விட உயரம் குறைவாக உள்ள நிலப்பகுதிகள் உள்ளே போய்விடும். இதுதான் இயல்பு, எனவே தாழ்வாக இருக்கும் பகுதிகள் கடலுக்குள் செல்ல வாய்ப்பிருக்கிறது. நாசாவின் ஆய்வானது முதல் ஆய்வு அல்ல. அதற்கு முன்பாகவே பல்வேறு ஆய்வுகள் வெளியாகியுள்ளன. அண்மையில் 2018ஆம் ஆண்டு Central Climatic Centre என்ற அமைப்பு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். இந்த அறிக்கையில் 2030 - 2040 ஆம் ஆண்டுக்குள் கடலின் நீர் மட்டம் உயர்வதால் பல பகுதிகள் மூழ்கும் ஆபத்து உள்ளதாக சொல்லியுள்ளார்கள். எந்த காலகட்டத்தில் எந்த அளவுக்கு இதெல்லாம் நடக்கும் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வந்துள்ளன. நாசா இந்த நூற்றாண்டின் முடிவில் இது போல் நிகழும் என சொல்லியுள்ளது. பூமியின் தட்பவெப்பநிலையி்ல எந்த அளவுக்கு மாற்றம் ஏற்படுகிறது, அதன் காரணமாக பனி எந்த அளவுக்கு உருக்கம் இருக்கும், இதன் காரணமாக கடல் மட்டம் எந்த அளவுக்கு இருக்கும் என சொல்லியுள்ளது. பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் கடல் மட்டம் உயர்வு என பார்த்தால் 3 அடி முதல் 7 அடி வரை உயர வாய்ப்புள்ளது. அப்படி நிகழும் பட்சத்தில் பல நிலப்பரப்புகள் கடலுக்குள் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்டவை எல்லாம் கடலில் மூழ்கக் கூடிய ஆபத்து இருக்கும் பகுதிகள். கூடுதலாக டெல்டா பகுதிகள், கிருஷ்ணா கோதாவரி பகுதிகள் உள்ளிட்ட டெல்டா பகுதிகள் இவையெல்லாமும் கடலுக்குள் மூழ்குவதற்கான ஆபத்து இருக்கின்றன. இந்த ஆபத்தை எதிர்நோக்கிதான் சென்று கொண்டிருக்கிறோம். கே: புவி வெப்பமயமாதலை தடுக்க ஐநா எடுக்கும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறதா ப: 1980 களிலேயே புவி வெப்பயமாதல் குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துவிட்டார்கள். 1991 ஆம் ஆண்டு பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக ஐநா ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கினார்கள். பருவநிலை மாற்றத்திற்கான ஐ நா குழுவின் ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக 1997 இல் கைட்டோ புரோட்டோகால் என்ற ஒப்பந்தம் வந்தது. இந்த இரு ஒப்பந்தங்களும், "காலநிலை மாற்றம் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதை தடுக்க நிறைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாடுகள் தாமாக முன் வந்து பசுமை இல்ல வாயுக்களான கார்பன், மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு போன்ற வாயுக்களின் வெளியேற்றத்தை குறைக்க வேண்டும்" என்ற அளவில் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இந்தியா அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அமெரிக்கா தொடக்கத்திலிருந்தே இந்த ஒப்பந்தத்தை எதிர்த்துக் கொண்டுதான் வந்தது. இந்த இரு ஒப்பந்தங்களுமே காலாவதியான பிறகு 2016 ஆம் ஆண்டு பாரீஸில் இன்னொரு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. மற்ற இரு ஒப்பந்தங்களும் வெறும் ஆலோசனைகளை மட்டுமே சொல்லியுள்ளன. ஆனால் இந்த பாரீஸ் ஒப்பந்தமானது இலக்கை நிர்ணயித்தது. இதில் "பூமியின் தட்பவெப்பநிலை கண்டிப்பாக உயரக் கூடும். அதை எந்தளவுக்கு உயரவிடலாம் என்பதை பார்க்கும் போது 1.5 டிகிரி சென்டிகிரேட் அளவுக்கு உயர்ந்தால் நம்மால் சமாளிக்க முடியும். இதுவும் ஆபத்தானதுதான், எனினும் உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகள் இருந்தது. இனி வரும் காலங்களில் பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸுக்கு உயரத்தான் போகிறது. அதற்குள் வெப்பநிலையை வைத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இது 2 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் சென்றால் மிகவும் ஆபத்தாகிவிடும்" என அந்த ஒப்பந்தம் சொல்லியதோடு அதற்கு நாம் என்னவெலாம் செய்ய வேண்டும் என்பதையும் அந்த ஒப்பந்தம் சொல்லியுள்ளது. இன்னும் உள்ள 10 ஆண்டுகளில் உலக நாடுகளில் இருந்து வெளியேறக் கூடிய பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை 50 சதவீதமாக குறைக்க வேண்டும். 2050 ஆம் ஆண்டுக்குள் அதை ஜீரோவாக்க வேண்டும். கார்பன் வெளியேற்றமே இருக்கக் கூடாது. அப்படியான ஒரு நிலை வந்தால் மட்டும்தான் பூமியின் வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அளவுக்கு நம்மால் கட்டுப்படுத்த முடியும். இதை பின்பற்றுமாறு ஐக்கிய நாடுகள் முன் வைக்கிறார்கள். இந்த ஆலோசனைகளின்படி உலக நாடுகள் நடந்து கொள்கிறார்களா என்றால் ஏமாற்றமே விஞ்சுகிறது. கொரோனா காலத்தில் கூட பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் அதிகமாகவே உள்ளது. கே: புவிவெப்பமயமாதலுக்கு எதிராக மத்திய மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கை பலனை தருகிறதா? ப: இந்தியாவை பொருத்தமட்டில் 2016 ஆம் ஆண்டு பாரீஸ் ஒப்பந்தத்தில் நாம் கையெழுத்திட்ட பின்னர் பசுமை இல்ல வாயுக்களை இந்த அளவுக்குத்தான் வெளியிடுவோம் என ஒவ்வொரு நாடுகளும் அளவை நிர்ணயித்துக் கொள்ளலாம். அந்த வகையில் இந்தியா 2030-ஆம் ஆண்டுக்குள் 30 சதவீதம் அளவுக்கு பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை குறைப்போம் என இந்தியா வாக்குறுதி அளித்தது. புவி வெப்பமயமாதலுக்கு அடிப்படை காரணமாக இருப்பதே நிலக்கரிதான். அப்படியென்றால் நிலக்கரியை சார்ந்திருக்கக் கூடிய அனல்மின் நிலையங்களில் இருந்து வெளியே வர வேண்டும். இதற்கு மாற்று என்றால் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்தான் (renewable energy). இந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி பயணம் செய்வதற்கான முன்னெடுப்புகளை இந்தியா செய்து கொண்டிருக்கிறது. மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்த போது புவிவெப்பயமாதல் பிரச்சினையை எதிர்கொள்ள 12 திட்டங்களை அவர்கள் வகுத்தார்கள். இதையடுத்து வந்த பாஜக அரசு 2 திட்டங்களை அந்த 12 திட்டங்களுடன் சேர்த்தது. இதை தவிர்த்து கூடுதல் செயல்பாடுகள் இந்தியாவில் இல்லை. இது போதாது. 2019 ஆம் ஆண்டு ஐஐடி கான்பூர் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டார்கள். அதில் ஒட்டுமொத்தமாக காலநிலை மாற்றம் பிரச்சினையால் இந்தியாவில் எந்த மாதிரியான பிரச்சினைகள் உருவாகும் என்பதை கூறியுள்ளார்கள். அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய அளவில் புவியின் வெப்பம் 1 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்கிறார்கள். இந்தியாவுக்கான பருவநிலைக்கான மாதிரி என்பதே கிடையாது என்கிறது அந்த ஆய்வு. இந்தியாவில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணிகளை செய்கிறோம். இவையும் பூமி வெப்பமயமாதலுக்கானதுதான். இந்தியாவில் புவி வெப்பமயமாதலுக்கு காரணமாக இருப்பது தெர்மல் மின் நிலையம், போக்குவரத்து ஆகிய இரு துறைகள்தான். இந்த இரு துறைகளிலிருந்து பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை குறைக்க வேண்டும். நிலக்கரியை சார்ந்துள்ள மின் உற்பத்தியை முற்றிலும் தடை செய்ய வேண்டும். ஹைட்ரோகார்பன், மீத்தேன், பெட்ரோலியம், ஆயில் கேஸ் ஆகிய தொழில் துறைகளில் இருந்து நாம் வெளியே வர வேண்டும். போக்குவரத்து என்பதை முழுக்க முழுக்க எலக்ட்ரிக்கல் வாகனங்களை சார்ந்து இருக்க வேண்டும். இதையெல்லாம் நாம் செய்ய இன்னும் தயாராக இல்லை. நமது உற்பத்தி என்பது சூழலியல் சார்ந்து பருவநிலை மாற்றத்தை அடிப்படையாக கொண்டு இருக்க வேண்டும். அதிக மழை, வெள்ளம், வறட்சி, வெப்பம், குளிர் ஆகியவற்றை தடுக்க இயற்கை சார்ந்த பகுதிகளை (Ecologically sensitive areas)பாதுகாக்க வேண்டும் என ஐநா அறிவுறுத்துகிறது. மேற்கு தொடர்ச்சி மலைகள், அலையாத்தி காடுகள், மன்னார் வளைகுடா பகுதியில் பவள பாறைகள், ஈரநிலங்கள் உள்ளிட்டவை நமக்கு அரணாக இருந்து நமக்கான பாதிப்புகளை குறைக்கும். ஈஐஏ 2020, சூழலுக்கு எதிரான உற்பத்திகள் எல்லாம் வெப்பநிலை உயருவதை தடுப்பதற்கு முரணாக உள்ளது. வரும் பட்ஜெட்டில் காலநிலை மாற்றத்தை காக்க ஏதேனும் நிதி ஒதுக்கீடு, கொள்கைகளை கொண்டு வருகிறார்களா என பார்ப்போம் என்றார் வெற்றிச் செல்வன்.