Breaking News

ஒரு வாகனம் வாங்கும்போது எச்சரிக்கை அவசியம்- முழுமையாக படிக்கவும்

காரை விற்பனை செய்த இன்ஜினியர் ஒருவரே, டூப்ளிகேட் சாவியை பயன்படுத்தி, அந்த காரை திருடி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில், அந்த இன்ஜினியரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த விரிவான தகவல்களையும், செகண்ட் ஹேண்டில் வாகனம் வாங்கும்போது எப்படி எச்சரிக்கையாக இருப்பது? என்பது குறித்த தகவல்களையும் பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.
காரை விற்பது போல் விற்று திருடிய இன்ஜினியர்.. செகண்ட் ஹேண்டு வாகனம் வாங்கும்போது எச்சரிக்கை அவசியம்
உத்தரபிரதேச மாநிலம் காஸியாபாத் பகுதியை சேர்ந்தவர் சர்ப்ராசுதீன். சிற்பி. இவர் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம், மனோஜ் சிங்கால் என்பவரிடம் இருந்து ஆடி ஏ6 செடான் காரை விலைக்கு வாங்கினார். காரின் விலை 17.5 லட்சம் என முடிவு செய்து கொள்ளப்பட்டது.
காரை விற்பது போல் விற்று திருடிய இன்ஜினியர்.. செகண்ட் ஹேண்டு வாகனம் வாங்கும்போது எச்சரிக்கை அவசியம்
இதற்காக முதல் கட்டமாக 50,000 ரூபாயை மனோஜ் சிங்காலிடம், சிற்பியான சர்ப்ராசுதீன் வழங்கி விட்டார். அதன்பின் காரையும் சர்ப்ராசுதீன் எடுத்து கொண்டு சென்று விட்டார். எஞ்சிய பணத்தை தவணை முறையில் செலுத்துவது என இருவருக்கும் இடையே ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
காரை விற்பது போல் விற்று திருடிய இன்ஜினியர்.. செகண்ட் ஹேண்டு வாகனம் வாங்கும்போது எச்சரிக்கை அவசியம்
இதன்படி மனோஜ் சிங்காலுக்கு, 14 லட்ச ரூபாயை இன்டர்நெட் பேங்கிங் மூலமாக, சர்ப்ராசுதீன் அனுப்பினார். ஆனால் 14.5 லட்சம் செலுத்தியும் கூட, சர்ப்பராசுதீன் பெயருக்கு காரின் ஆர்சி புத்தகத்தை மனோஜ் சிங்கால் மாற்றி தரவில்லை. முழு பணமும் செலுத்திய பின்புதான் பெயரை மாற்றி தர முடியும் என மனோஜ் சிங்கால் கூறியுள்ளார்.
காரை விற்பது போல் விற்று திருடிய இன்ஜினியர்.. செகண்ட் ஹேண்டு வாகனம் வாங்கும்போது எச்சரிக்கை அவசியம்
இதனிடையே மனோஜ் சிங்காலுக்கு ரூ.3 லட்சத்தை மட்டும் சர்ப்ராசுதீன் பாக்கி வைத்திருந்தார். அந்த பணத்தை வாங்குவதற்காக, டெல்லியில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவிற்கு சர்ப்ராசுதீனை, மனோஜ் சிங்கால் அழைத்திருந்தார்.
காரை விற்பது போல் விற்று திருடிய இன்ஜினியர்.. செகண்ட் ஹேண்டு வாகனம் வாங்கும்போது எச்சரிக்கை அவசியம்
இந்த சந்திப்பு கடந்த மார்ச் 15ம் தேதி நடைபெற்றது. அப்போது தனது சாக்ஸியையும் சர்ப்ராசுதீன் உடன் அழைத்து சென்றிருந்தார். அங்குள்ள கேன்டீனில் அமர்ந்து அவர்கள் அனைவரும் பேசி கொண்டிருந்தனர்.
காரை விற்பது போல் விற்று திருடிய இன்ஜினியர்.. செகண்ட் ஹேண்டு வாகனம் வாங்கும்போது எச்சரிக்கை அவசியம்
அப்போது மனோஜ் சிங்கால் பணம் அதிகமாக வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அவர்களுக்குள் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் மனோஜ் சிங்கால் அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார்.
காரை விற்பது போல் விற்று திருடிய இன்ஜினியர்.. செகண்ட் ஹேண்டு வாகனம் வாங்கும்போது எச்சரிக்கை அவசியம்
சிறிது நேரம் கழித்து சர்ப்ராசுதீன், சாக்ஸி ஆகியோரும் வெளியே வந்துள்ளனர். ஆனால் மனோஜ் சிங்காலிடம் வாங்கி பயன்படுத்தி வந்த ஆடி ஏ6 செடான் காரை காணவில்லை. இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
காரை விற்பது போல் விற்று திருடிய இன்ஜினியர்.. செகண்ட் ஹேண்டு வாகனம் வாங்கும்போது எச்சரிக்கை அவசியம்
இதுகுறித்து டெல்லியில் உள்ள ஹஜ்ரத் நிஜாமுதீன் போலீஸ் ஸ்டேஷனில், சர்ப்ராசுதீன் புகார் அளித்தார். போலீசாரும் உடனடியாக விசாரணையை தொடங்கினர். இதில், சர்ப்ராசுதீனிடம் காரை வழங்கும்போது, அதற்கான டூப்ளிகேட் சாவியை மனோஜ் சிங்கால் ஒப்படைக்கவில்லை என்ற தகவல் தெரியவந்தது.
காரை விற்பது போல் விற்று திருடிய இன்ஜினியர்.. செகண்ட் ஹேண்டு வாகனம் வாங்கும்போது எச்சரிக்கை அவசியம்
இதனை அடிப்படையாக வைத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். இதில், தன்னிடம் இருந்த டூப்ளிகேட் சாவியை பயன்படுத்தி, மனோஜ் சிங்கால்தான் காரை திருடி சென்று விட்டார் என்பது கண்டறியப்பட்டது. இதனால் மனோஜ் சிங்கால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.
காரை விற்பது போல் விற்று திருடிய இன்ஜினியர்.. செகண்ட் ஹேண்டு வாகனம் வாங்கும்போது எச்சரிக்கை அவசியம்
ஆனால் மனோஜ் சிங்கால் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. இதனால் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளி வரமுடியாத பிடியாணையை நீதிமன்றம் பிறப்பித்தது. தொடர்ந்து அவரை தேடி வந்த போலீசார், உத்தரகாண்டில் உள்ள காஸிபூர் பகுதியில் வைத்து மனோஜ் சிங்காலை கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்தனர்.
காரை விற்பது போல் விற்று திருடிய இன்ஜினியர்.. செகண்ட் ஹேண்டு வாகனம் வாங்கும்போது எச்சரிக்கை அவசியம்
மனோஜ் சிங்கால் திருடி சென்ற கார், டெல்லி கரோல் பாக் பிடான்பூர் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது. அதனை போலீசார் மீட்டனர். கார் நிறுத்தப்பட்டிருந்த பிடான்பூரில்தான், மனோஜ் சிங்கால் மொபைல் கடை வைத்துள்ளார். பி.டெக்., முடித்துள்ள அவர் தற்போது எம்.டெக்., படித்து வருகிறார்.
காரை விற்பது போல் விற்று திருடிய இன்ஜினியர்.. செகண்ட் ஹேண்டு வாகனம் வாங்கும்போது எச்சரிக்கை அவசியம்
இதனிடையே கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்களை, செகண்ட் ஹேண்டில் வாங்கும்போது,மோசடி செய்யப்பட்ட சம்பவங்கள் பல அரங்கேறியுள்ளன. மனோஜ் சிங்கால் கைது செய்யப்பட்ட விவகாரம், செகண்ட் ஹேண்டில் கார், பைக் வாங்கும்போது, கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது. இது போன்ற மோசடிகளில் இருந்து எப்படி தப்பிக்கலாம்? என்பதை இனி பார்க்கலாம்.
காரை விற்பது போல் விற்று திருடிய இன்ஜினியர்.. செகண்ட் ஹேண்டு வாகனம் வாங்கும்போது எச்சரிக்கை அவசியம்
வாகனத்தை வாங்கிய உடன், முடிந்த வரை வேகமாக, அதனை உங்கள் பெயருக்கு மாற்றி கொள்ளுங்கள். அதேபோல் டூப்ளிகேட் சாவியையும் மறக்காமல் கேட்டு வாங்கி கொள்ளுங்கள். டூப்ளிகேட் சாவி தொலைந்து போய் விட்டது, திருடு போய் விட்டது என கூறினாலும், உஷாராக இருப்பது அவசியம்.
காரை விற்பது போல் விற்று திருடிய இன்ஜினியர்.. செகண்ட் ஹேண்டு வாகனம் வாங்கும்போது எச்சரிக்கை அவசியம்
ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் வைத்து, பண பரிமாற்றத்தை செய்ய வேண்டாம். பணத்தை ஒப்படைக்க, மக்கள் நடமாட்டம் நிறைந்த பொதுவான இடங்களே சிறந்தது. பணம் செலுத்தியதற்காக வழங்கப்பட்ட ரசீதுகளையும் தொலைக்காமல் வைத்து கொள்ளவும்.
காரை விற்பது போல் விற்று திருடிய இன்ஜினியர்.. செகண்ட் ஹேண்டு வாகனம் வாங்கும்போது எச்சரிக்கை அவசியம்
பார்ப்பதற்கு உண்மையானது என தோன்றினாலும், ஒப்பந்தங்களை ஒரு முறைக்கு இரு முறை நன்றாக படித்து கொள்ளுங்கள். ஏனெனில் அது மோசடியானதாக கூட இருக்கலாம்.

Avoid coal, petrol and diesel .. Only then can we prevent global warming

சென்னை: அனல் மின் நிலையம், போக்குவரத்து ஆகிய துறைகளே புவிவெப்பமயமாதலுக்கு முக்கிய காரணங்கள் என பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் வெற்றிச் செல்வன் தெரிவித்துள்ளார். பூவுலகின் நண்பர்கள் (Friends of Earth)இயக்கமானது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிரச்சினைகளை கையில் எடுத்து அதற்காக போராடி வருகிறது. எட்டு வழிச் சாலை, சுற்றுச்சூழல் தாக்க வரைவு, காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம், காலநிலை மாற்றம் உள்ளிட்டவைகளுக்காக குரல் கொடுத்து வருகிறது. Exclusive: Poovulagin Nanbargal movement Vetriselvan says about Global warming இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் வெற்றிச் செல்வன் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டி கேள்வி பதில் வடிவில்: கே: சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட 12 நகரங்கள் 3 மீட்டர் ஆழத்திற்கு கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து உங்கள் கருத்து என்ன ப: 1980 ஆம் ஆண்டுகளில் இருந்தே புவி வெப்பமயமாதலை கேள்விப்பட்டு வருகிறோம். பூமி சூடாகி வருகிறது. இதன் காரணமாக காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. புவி வெப்பமாவதன் காரணமாக ஆர்டிக் மற்றும் அன்டார்டிக் பகுதிகளில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. இதனால் தண்ணீரின் அளவு அதிகமாகிறது. இதனால் கடல் மட்டத்தின் அளவானது உயர்ந்து கொண்டே இருக்கிறது. இது போல் நிகழும் போது கடல் மட்டத்தை விட உயரம் குறைவாக உள்ள நிலப்பகுதிகள் உள்ளே போய்விடும். இதுதான் இயல்பு, எனவே தாழ்வாக இருக்கும் பகுதிகள் கடலுக்குள் செல்ல வாய்ப்பிருக்கிறது. நாசாவின் ஆய்வானது முதல் ஆய்வு அல்ல. அதற்கு முன்பாகவே பல்வேறு ஆய்வுகள் வெளியாகியுள்ளன. அண்மையில் 2018ஆம் ஆண்டு Central Climatic Centre என்ற அமைப்பு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். இந்த அறிக்கையில் 2030 - 2040 ஆம் ஆண்டுக்குள் கடலின் நீர் மட்டம் உயர்வதால் பல பகுதிகள் மூழ்கும் ஆபத்து உள்ளதாக சொல்லியுள்ளார்கள். எந்த காலகட்டத்தில் எந்த அளவுக்கு இதெல்லாம் நடக்கும் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வந்துள்ளன. நாசா இந்த நூற்றாண்டின் முடிவில் இது போல் நிகழும் என சொல்லியுள்ளது. பூமியின் தட்பவெப்பநிலையி்ல எந்த அளவுக்கு மாற்றம் ஏற்படுகிறது, அதன் காரணமாக பனி எந்த அளவுக்கு உருக்கம் இருக்கும், இதன் காரணமாக கடல் மட்டம் எந்த அளவுக்கு இருக்கும் என சொல்லியுள்ளது. பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் கடல் மட்டம் உயர்வு என பார்த்தால் 3 அடி முதல் 7 அடி வரை உயர வாய்ப்புள்ளது. அப்படி நிகழும் பட்சத்தில் பல நிலப்பரப்புகள் கடலுக்குள் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்டவை எல்லாம் கடலில் மூழ்கக் கூடிய ஆபத்து இருக்கும் பகுதிகள். கூடுதலாக டெல்டா பகுதிகள், கிருஷ்ணா கோதாவரி பகுதிகள் உள்ளிட்ட டெல்டா பகுதிகள் இவையெல்லாமும் கடலுக்குள் மூழ்குவதற்கான ஆபத்து இருக்கின்றன. இந்த ஆபத்தை எதிர்நோக்கிதான் சென்று கொண்டிருக்கிறோம். கே: புவி வெப்பமயமாதலை தடுக்க ஐநா எடுக்கும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறதா ப: 1980 களிலேயே புவி வெப்பயமாதல் குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துவிட்டார்கள். 1991 ஆம் ஆண்டு பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக ஐநா ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கினார்கள். பருவநிலை மாற்றத்திற்கான ஐ நா குழுவின் ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக 1997 இல் கைட்டோ புரோட்டோகால் என்ற ஒப்பந்தம் வந்தது. இந்த இரு ஒப்பந்தங்களும், "காலநிலை மாற்றம் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதை தடுக்க நிறைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாடுகள் தாமாக முன் வந்து பசுமை இல்ல வாயுக்களான கார்பன், மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு போன்ற வாயுக்களின் வெளியேற்றத்தை குறைக்க வேண்டும்" என்ற அளவில் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இந்தியா அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அமெரிக்கா தொடக்கத்திலிருந்தே இந்த ஒப்பந்தத்தை எதிர்த்துக் கொண்டுதான் வந்தது. இந்த இரு ஒப்பந்தங்களுமே காலாவதியான பிறகு 2016 ஆம் ஆண்டு பாரீஸில் இன்னொரு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. மற்ற இரு ஒப்பந்தங்களும் வெறும் ஆலோசனைகளை மட்டுமே சொல்லியுள்ளன. ஆனால் இந்த பாரீஸ் ஒப்பந்தமானது இலக்கை நிர்ணயித்தது. இதில் "பூமியின் தட்பவெப்பநிலை கண்டிப்பாக உயரக் கூடும். அதை எந்தளவுக்கு உயரவிடலாம் என்பதை பார்க்கும் போது 1.5 டிகிரி சென்டிகிரேட் அளவுக்கு உயர்ந்தால் நம்மால் சமாளிக்க முடியும். இதுவும் ஆபத்தானதுதான், எனினும் உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகள் இருந்தது. இனி வரும் காலங்களில் பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸுக்கு உயரத்தான் போகிறது. அதற்குள் வெப்பநிலையை வைத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இது 2 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் சென்றால் மிகவும் ஆபத்தாகிவிடும்" என அந்த ஒப்பந்தம் சொல்லியதோடு அதற்கு நாம் என்னவெலாம் செய்ய வேண்டும் என்பதையும் அந்த ஒப்பந்தம் சொல்லியுள்ளது. இன்னும் உள்ள 10 ஆண்டுகளில் உலக நாடுகளில் இருந்து வெளியேறக் கூடிய பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை 50 சதவீதமாக குறைக்க வேண்டும். 2050 ஆம் ஆண்டுக்குள் அதை ஜீரோவாக்க வேண்டும். கார்பன் வெளியேற்றமே இருக்கக் கூடாது. அப்படியான ஒரு நிலை வந்தால் மட்டும்தான் பூமியின் வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அளவுக்கு நம்மால் கட்டுப்படுத்த முடியும். இதை பின்பற்றுமாறு ஐக்கிய நாடுகள் முன் வைக்கிறார்கள். இந்த ஆலோசனைகளின்படி உலக நாடுகள் நடந்து கொள்கிறார்களா என்றால் ஏமாற்றமே விஞ்சுகிறது. கொரோனா காலத்தில் கூட பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் அதிகமாகவே உள்ளது. கே: புவிவெப்பமயமாதலுக்கு எதிராக மத்திய மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கை பலனை தருகிறதா? ப: இந்தியாவை பொருத்தமட்டில் 2016 ஆம் ஆண்டு பாரீஸ் ஒப்பந்தத்தில் நாம் கையெழுத்திட்ட பின்னர் பசுமை இல்ல வாயுக்களை இந்த அளவுக்குத்தான் வெளியிடுவோம் என ஒவ்வொரு நாடுகளும் அளவை நிர்ணயித்துக் கொள்ளலாம். அந்த வகையில் இந்தியா 2030-ஆம் ஆண்டுக்குள் 30 சதவீதம் அளவுக்கு பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை குறைப்போம் என இந்தியா வாக்குறுதி அளித்தது. புவி வெப்பமயமாதலுக்கு அடிப்படை காரணமாக இருப்பதே நிலக்கரிதான். அப்படியென்றால் நிலக்கரியை சார்ந்திருக்கக் கூடிய அனல்மின் நிலையங்களில் இருந்து வெளியே வர வேண்டும். இதற்கு மாற்று என்றால் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்தான் (renewable energy). இந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி பயணம் செய்வதற்கான முன்னெடுப்புகளை இந்தியா செய்து கொண்டிருக்கிறது. மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்த போது புவிவெப்பயமாதல் பிரச்சினையை எதிர்கொள்ள 12 திட்டங்களை அவர்கள் வகுத்தார்கள். இதையடுத்து வந்த பாஜக அரசு 2 திட்டங்களை அந்த 12 திட்டங்களுடன் சேர்த்தது. இதை தவிர்த்து கூடுதல் செயல்பாடுகள் இந்தியாவில் இல்லை. இது போதாது. 2019 ஆம் ஆண்டு ஐஐடி கான்பூர் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டார்கள். அதில் ஒட்டுமொத்தமாக காலநிலை மாற்றம் பிரச்சினையால் இந்தியாவில் எந்த மாதிரியான பிரச்சினைகள் உருவாகும் என்பதை கூறியுள்ளார்கள். அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய அளவில் புவியின் வெப்பம் 1 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்கிறார்கள். இந்தியாவுக்கான பருவநிலைக்கான மாதிரி என்பதே கிடையாது என்கிறது அந்த ஆய்வு. இந்தியாவில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணிகளை செய்கிறோம். இவையும் பூமி வெப்பமயமாதலுக்கானதுதான். இந்தியாவில் புவி வெப்பமயமாதலுக்கு காரணமாக இருப்பது தெர்மல் மின் நிலையம், போக்குவரத்து ஆகிய இரு துறைகள்தான். இந்த இரு துறைகளிலிருந்து பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை குறைக்க வேண்டும். நிலக்கரியை சார்ந்துள்ள மின் உற்பத்தியை முற்றிலும் தடை செய்ய வேண்டும். ஹைட்ரோகார்பன், மீத்தேன், பெட்ரோலியம், ஆயில் கேஸ் ஆகிய தொழில் துறைகளில் இருந்து நாம் வெளியே வர வேண்டும். போக்குவரத்து என்பதை முழுக்க முழுக்க எலக்ட்ரிக்கல் வாகனங்களை சார்ந்து இருக்க வேண்டும். இதையெல்லாம் நாம் செய்ய இன்னும் தயாராக இல்லை. நமது உற்பத்தி என்பது சூழலியல் சார்ந்து பருவநிலை மாற்றத்தை அடிப்படையாக கொண்டு இருக்க வேண்டும். அதிக மழை, வெள்ளம், வறட்சி, வெப்பம், குளிர் ஆகியவற்றை தடுக்க இயற்கை சார்ந்த பகுதிகளை (Ecologically sensitive areas)பாதுகாக்க வேண்டும் என ஐநா அறிவுறுத்துகிறது. மேற்கு தொடர்ச்சி மலைகள், அலையாத்தி காடுகள், மன்னார் வளைகுடா பகுதியில் பவள பாறைகள், ஈரநிலங்கள் உள்ளிட்டவை நமக்கு அரணாக இருந்து நமக்கான பாதிப்புகளை குறைக்கும். ஈஐஏ 2020, சூழலுக்கு எதிரான உற்பத்திகள் எல்லாம் வெப்பநிலை உயருவதை தடுப்பதற்கு முரணாக உள்ளது. வரும் பட்ஜெட்டில் காலநிலை மாற்றத்தை காக்க ஏதேனும் நிதி ஒதுக்கீடு, கொள்கைகளை கொண்டு வருகிறார்களா என பார்ப்போம் என்றார் வெற்றிச் செல்வன்.