Breaking News

முன்னாடி வாழைப்பழம் சாப்பிடுறீங்களா? அப்போ இத படிங்க..!!!

பொதுவாக இரவு உணவினை எடுக்கும் போதே சற்று கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். ஒரே உணவு காலையில்... பகல் நேரத்தில் சாப்பிட்டால் ஒரு வித பலனும் இரவு நேரத்தில் சாப்பிட்டால் அது வேறு மாதிரியான பலனும் கொடுப்பதுண்டு.
உண்ட உணவு செரிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்,அதற்காக இரவு உணவினை குறைவாக சாப்பிடுங்கள், பழங்களைச் சாப்பிடுங்கள் என்று சொல்லப்படுவதுண்டு. சிலர் இரவு உணவு எடுத்துக் கொண்டு தூங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பு பழத்தைச் சாப்பிட்டுவிட்டு படுப்பார்கள். இன்னும் சிலரோ இரவு நன்றாக தூக்கம் வர வேண்டும் என்று சொல்லி வாழைப்பழம் சாப்பிடுவார்கள். அதோடு சிலர் ஒரு கிளாஸ் பாலையும் சேர்த்துக் கொள்வார்கள்.

வாழைப்பழம் :

பொதுவாக கொழுப்பு நிறைந்த உணவுகள், சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்டது, துரித உணவுகள், எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவு போன்றவை எல்லாம் உடலுக்கு தீங்கானது காய்கறி மற்றும் பழங்களை எந்த நேரத்திலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்ற எண்ணம் எல்லாருக்கும் இருக்கிறது.
வாழைப்பழம் : எந்த நேரத்திலும் என்றால் இரவு நேரத்திலுமா? உண்மையில் இரவு தூங்குவதற்கு முன்னால் வாழைப்பழம் சாப்பிடலாமா? தினமும் இதனை தொடரும் பட்சத்தில் வாழைப்பழம் உங்கள் உடல் நலனுக்கு எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்திடும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

சத்துக்கள் :

சத்துக்கள் : வாழைப்பழத்தில் ஏரளாமான சத்துக்கள் ஒளிந்திருக்கின்றன. இதில் அதிகளவு கார்போஹைட்ரேட்ஸ் இருக்கிறது. குறிப்பாக பச்சை வாழைப்பழத்தில் அதிகளவு கார்போஹைட்ரேட் இருக்கும். இதிலிருக்கும் சர்க்கரை ஃப்ருக்டோஸ் வகையாகத் தான் இருக்கிறது.
அதனால் வாழைப்பழம் சாப்பிட்டவுடன் எளிதில் நம் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுகிறது. அதனால் சோர்வாக உணரும் போது வாழைப்பழம் சாப்பிட்டால் புத்துணர்ச்சி கிடைக்கும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

இதய நலன் : இதய நலன் :

வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் இருக்கிறது. இவை நம் இதயத்திற்கு மிகவும் நல்லது. அதோடு நம்முடைய ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி மாரடைப்பு வராமல் தடுக்கவும் உதவிடுகிறது.
வாழைப்பழத்தில் இருக்கக்கூடிய பொட்டாசியம் இதில் முக்கியப்பங்காற்றுகிறது. இதயம் தொடர்பான பிரச்சனைகள், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனை இருப்பவர்கள் வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.


கொலஸ்ட்ரால் : கொலஸ்ட்ரால் :

வாழைப்பழத்தில் ஸ்டிரோல் என்ற சத்து உண்டு. இதுவும் நம் இதய நலனில் முக்கியப் பங்காற்றுகிறது. அதோடு இவை கெட்ட கொழுப்பு உடலில் தங்குவதை தடுத்திடும். இதிலிருக்கக்கூடிய நார்ச்சத்து நம் சாப்பிட்ட உணவினை எளிதில் செரிக்க உதவிடும். இதிலிருக்ககூடியது தண்ணீரில் கரையக்கூடிய நார்ச்சத்து என்பதால் நீங்கள் தாரளமாக சாப்பிடலாம்.

செரிமானம் : செரிமானம் :

இந்த நார்ச்சத்து நாம் சாப்பிட்ட உணவினை செரிக்க பெரிதும் உதவிடுகிறது. ஒரு நாளைக்கு உங்களுக்கு தேவையான நார்ச்சத்தினை ஒரு வாழைப்பழம் பூர்த்தி செய்திடும். இதிலிருக்கூடியது பெக்டின் ஃபைபர் என்று சொல்லப்படக்கூடிய ஒரு வகை ஃபைபர்.
வாழைப்பழம் முழுதாக பழுக்கும் போது இதிலிருக்ககூடிய ஃபைபரின் அளவும் கூடுகிறது.


இரவு நேரத்தில் : இரவு நேரத்தில் :

தூங்க சில நிமிடங்கள் முன்பு வாழைப்பழத்தை சாப்பிடுவது என்பது சரியான முறை அல்ல. வயிறு வலி, அல்லது பசி என்னும் பட்சத்தில் வாழைப்பழத்தை சாப்பிட்டு குறைந்தது அரை மணி நேரமாவது முழித்து இருக்க வேண்டியது கட்டாயம். வெறுமனே ஸ்நாக்ஸாக சாப்பிடுவது என்பது உங்கள் உடல் நலனுக்கு தீங்கினையே விளைவித்திடும்.


உணவு : உணவு :

வாழைப்பழத்தினை யாரும் ஸ்நாக்ஸ் என்ற ரீதியில் பரிந்துரைக்க மாட்டார்கள். அது ஒரு முழுமையான உணவு என்றே சொல்வார்கள். ஏனென்றால் வாழைப்பழத்தில் மக்னீசியம், பொட்டாசியம், விட்டமின்ஸ் ,ஃபைபர் என ஏரளமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.
இவை முழுமையான உணர்வைக் கொடுப்பதுடன் உங்களுக்கு ஆழ்ந்த தூக்கத்தினையும் கொடுத்திடும்.


கேக் : கேக் :

வாழைப்பழம் நல்ல தூக்கத்தை கொடுக்கும் என்பதற்காக எல்லாம் தயாராகி தூங்க செல்வதற்கு முன்னால் சாப்பிட்டுவிட்டு படுப்பது கூடாது. ஏனென்றால் அன்றைக்கு உங்களுக்கு தேவைப்பட்ட சத்துக்கள் எல்லாம் கிடைத்துவிட்டது உங்களுக்கு போதுமான உணவுகளை எடுத்து விட்டீர்கள். கூடுதலாக நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய இந்த வாழைப்பழம் உங்களுக்கு எக்ஸ்ட்ரா தான். இப்படி நீங்கள் சாப்பிடக்கூடிய வாழைப்பழம் இரவு படுக்கச் செல்வதற்கு முன்னால் பெரிய சைஸ் கேக் சாப்பிட்டதற்கு சமமாகும்.
இரவு தூங்குவதற்கு முன்னால் நாம் யாராவது கேக் சாப்பிடுவோமா?

குறைவு : குறைவு :

சிலருக்கு குறிப்பிட்ட நியூட்ரிசியன்கள் மட்டும் பற்றாகுறையாக இருக்கும். அவரக்ளுக்கு வாழைப்பழம் பெஸ்ட் சாய்ஸ். அப்படி குறையக்கூடிய நியூட்ரிசியன்களில் மக்னீசியம் முதன்மையான இடஹ்தை வகிக்கிறது. இரவில் தூக்கம் வராமல் தவிர்ப்பவர்களுக்கும், நடு இரவில் திடீரென்று முழிப்பு வருகிறவர்களுக்கும் மக்னீசியம் குறைபாடு இருக்கக்கூடும்.
வாழைப்பழத்தில் இருக்கக்கூடிய மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உங்களுக்கு நல்ல தூக்கத்தை கொடுக்கும். இதிலிருக்கக்கூடிஅய் டரைப்டோபான் உங்களின் அமைதியான தூக்கத்தை நிலைக்கச் செய்திடும்.


நிறைவு : நிறைவு :

வாழைப்பழம் நம் உடலின் தட்பவெட்ப நிலையை கண்ட்ரோல் செய்திடுகிறது. அதோடு நம்முடைய ஹார்மோன் சுரப்பையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறது. தூக்கத்திற்கு விட்டமின் பி6 மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். இது பெரும்பாலும் காய்கறி மற்றும் பழங்களில் தான் அதிகமிருக்கிறது. அதனால் தான் தூங்கும் போது, இரவு நேரத்தில் துரித உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம், வெறும் பழங்களைச் சாப்பிடுங்கள் என்று சொல்லப்படுகிறது.
உங்களுக்கு போதுமான அளவு விட்டமின் பி ஒரு வாழைப்பழத்திலிருந்து உங்களுக்கு கிடைக்கவில்லை என்றாலும் அவை உங்களுக்கு நிறைவான உணர்வைக் கொடுக்கும்.

அதீத பசி : அதீத பசி :

உணவு எடுத்துக் கொள்ள வேண்டிய நேரத்தினையும் தாண்டி நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்தால் உங்களுக்கு அதீத பசி உண்டாகிடும். இதனை சரியாக்க நீங்கள் வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக காலை உணவாக நீங்கள் இதனை எடுக்கலாம்.
காலையில் வாழைப்பாம் சாப்பிடுவதால் உங்களது இன்ஸுலின் அளவு அதிகரிக்கும். அதோடு பிற உணவுகளையும் நீங்கள் சேர்த்து சாப்பிடும் போது அவை உங்கள் ரத்தச் சர்க்கரையளவினை அதிகரித்திடும்.


எப்போ சாப்பிடலாம் ? : எப்போ சாப்பிடலாம் ? :

அப்படியானால் வாழைப்பழத்தை சாப்பிட சரியான நேரம் இரவு தான். இரவு என்றதும் தூங்கும் நேரத்திற்கு சில நிமிடங்கள் முன்பு அல்ல இரவு உணவாகவே இதனை நீங்க்ள் எடுத்துக் கொள்ள வேண்டும். இதிலிருக்கும் சத்துக்களால் உங்களுக்கு நீண்ட நேரம் நிறைவான உணர்வே மேலோங்கும் விரைவில் பசியெடுக்காது.

                                                 நன்றி: போல்ட் ஸ்கை.

Avoid coal, petrol and diesel .. Only then can we prevent global warming

சென்னை: அனல் மின் நிலையம், போக்குவரத்து ஆகிய துறைகளே புவிவெப்பமயமாதலுக்கு முக்கிய காரணங்கள் என பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் வெற்றிச் செல்வன் தெரிவித்துள்ளார். பூவுலகின் நண்பர்கள் (Friends of Earth)இயக்கமானது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிரச்சினைகளை கையில் எடுத்து அதற்காக போராடி வருகிறது. எட்டு வழிச் சாலை, சுற்றுச்சூழல் தாக்க வரைவு, காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம், காலநிலை மாற்றம் உள்ளிட்டவைகளுக்காக குரல் கொடுத்து வருகிறது. Exclusive: Poovulagin Nanbargal movement Vetriselvan says about Global warming இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் வெற்றிச் செல்வன் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டி கேள்வி பதில் வடிவில்: கே: சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட 12 நகரங்கள் 3 மீட்டர் ஆழத்திற்கு கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து உங்கள் கருத்து என்ன ப: 1980 ஆம் ஆண்டுகளில் இருந்தே புவி வெப்பமயமாதலை கேள்விப்பட்டு வருகிறோம். பூமி சூடாகி வருகிறது. இதன் காரணமாக காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. புவி வெப்பமாவதன் காரணமாக ஆர்டிக் மற்றும் அன்டார்டிக் பகுதிகளில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. இதனால் தண்ணீரின் அளவு அதிகமாகிறது. இதனால் கடல் மட்டத்தின் அளவானது உயர்ந்து கொண்டே இருக்கிறது. இது போல் நிகழும் போது கடல் மட்டத்தை விட உயரம் குறைவாக உள்ள நிலப்பகுதிகள் உள்ளே போய்விடும். இதுதான் இயல்பு, எனவே தாழ்வாக இருக்கும் பகுதிகள் கடலுக்குள் செல்ல வாய்ப்பிருக்கிறது. நாசாவின் ஆய்வானது முதல் ஆய்வு அல்ல. அதற்கு முன்பாகவே பல்வேறு ஆய்வுகள் வெளியாகியுள்ளன. அண்மையில் 2018ஆம் ஆண்டு Central Climatic Centre என்ற அமைப்பு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். இந்த அறிக்கையில் 2030 - 2040 ஆம் ஆண்டுக்குள் கடலின் நீர் மட்டம் உயர்வதால் பல பகுதிகள் மூழ்கும் ஆபத்து உள்ளதாக சொல்லியுள்ளார்கள். எந்த காலகட்டத்தில் எந்த அளவுக்கு இதெல்லாம் நடக்கும் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வந்துள்ளன. நாசா இந்த நூற்றாண்டின் முடிவில் இது போல் நிகழும் என சொல்லியுள்ளது. பூமியின் தட்பவெப்பநிலையி்ல எந்த அளவுக்கு மாற்றம் ஏற்படுகிறது, அதன் காரணமாக பனி எந்த அளவுக்கு உருக்கம் இருக்கும், இதன் காரணமாக கடல் மட்டம் எந்த அளவுக்கு இருக்கும் என சொல்லியுள்ளது. பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் கடல் மட்டம் உயர்வு என பார்த்தால் 3 அடி முதல் 7 அடி வரை உயர வாய்ப்புள்ளது. அப்படி நிகழும் பட்சத்தில் பல நிலப்பரப்புகள் கடலுக்குள் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்டவை எல்லாம் கடலில் மூழ்கக் கூடிய ஆபத்து இருக்கும் பகுதிகள். கூடுதலாக டெல்டா பகுதிகள், கிருஷ்ணா கோதாவரி பகுதிகள் உள்ளிட்ட டெல்டா பகுதிகள் இவையெல்லாமும் கடலுக்குள் மூழ்குவதற்கான ஆபத்து இருக்கின்றன. இந்த ஆபத்தை எதிர்நோக்கிதான் சென்று கொண்டிருக்கிறோம். கே: புவி வெப்பமயமாதலை தடுக்க ஐநா எடுக்கும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறதா ப: 1980 களிலேயே புவி வெப்பயமாதல் குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துவிட்டார்கள். 1991 ஆம் ஆண்டு பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக ஐநா ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கினார்கள். பருவநிலை மாற்றத்திற்கான ஐ நா குழுவின் ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக 1997 இல் கைட்டோ புரோட்டோகால் என்ற ஒப்பந்தம் வந்தது. இந்த இரு ஒப்பந்தங்களும், "காலநிலை மாற்றம் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதை தடுக்க நிறைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாடுகள் தாமாக முன் வந்து பசுமை இல்ல வாயுக்களான கார்பன், மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு போன்ற வாயுக்களின் வெளியேற்றத்தை குறைக்க வேண்டும்" என்ற அளவில் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இந்தியா அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அமெரிக்கா தொடக்கத்திலிருந்தே இந்த ஒப்பந்தத்தை எதிர்த்துக் கொண்டுதான் வந்தது. இந்த இரு ஒப்பந்தங்களுமே காலாவதியான பிறகு 2016 ஆம் ஆண்டு பாரீஸில் இன்னொரு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. மற்ற இரு ஒப்பந்தங்களும் வெறும் ஆலோசனைகளை மட்டுமே சொல்லியுள்ளன. ஆனால் இந்த பாரீஸ் ஒப்பந்தமானது இலக்கை நிர்ணயித்தது. இதில் "பூமியின் தட்பவெப்பநிலை கண்டிப்பாக உயரக் கூடும். அதை எந்தளவுக்கு உயரவிடலாம் என்பதை பார்க்கும் போது 1.5 டிகிரி சென்டிகிரேட் அளவுக்கு உயர்ந்தால் நம்மால் சமாளிக்க முடியும். இதுவும் ஆபத்தானதுதான், எனினும் உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகள் இருந்தது. இனி வரும் காலங்களில் பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸுக்கு உயரத்தான் போகிறது. அதற்குள் வெப்பநிலையை வைத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இது 2 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் சென்றால் மிகவும் ஆபத்தாகிவிடும்" என அந்த ஒப்பந்தம் சொல்லியதோடு அதற்கு நாம் என்னவெலாம் செய்ய வேண்டும் என்பதையும் அந்த ஒப்பந்தம் சொல்லியுள்ளது. இன்னும் உள்ள 10 ஆண்டுகளில் உலக நாடுகளில் இருந்து வெளியேறக் கூடிய பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை 50 சதவீதமாக குறைக்க வேண்டும். 2050 ஆம் ஆண்டுக்குள் அதை ஜீரோவாக்க வேண்டும். கார்பன் வெளியேற்றமே இருக்கக் கூடாது. அப்படியான ஒரு நிலை வந்தால் மட்டும்தான் பூமியின் வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அளவுக்கு நம்மால் கட்டுப்படுத்த முடியும். இதை பின்பற்றுமாறு ஐக்கிய நாடுகள் முன் வைக்கிறார்கள். இந்த ஆலோசனைகளின்படி உலக நாடுகள் நடந்து கொள்கிறார்களா என்றால் ஏமாற்றமே விஞ்சுகிறது. கொரோனா காலத்தில் கூட பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் அதிகமாகவே உள்ளது. கே: புவிவெப்பமயமாதலுக்கு எதிராக மத்திய மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கை பலனை தருகிறதா? ப: இந்தியாவை பொருத்தமட்டில் 2016 ஆம் ஆண்டு பாரீஸ் ஒப்பந்தத்தில் நாம் கையெழுத்திட்ட பின்னர் பசுமை இல்ல வாயுக்களை இந்த அளவுக்குத்தான் வெளியிடுவோம் என ஒவ்வொரு நாடுகளும் அளவை நிர்ணயித்துக் கொள்ளலாம். அந்த வகையில் இந்தியா 2030-ஆம் ஆண்டுக்குள் 30 சதவீதம் அளவுக்கு பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை குறைப்போம் என இந்தியா வாக்குறுதி அளித்தது. புவி வெப்பமயமாதலுக்கு அடிப்படை காரணமாக இருப்பதே நிலக்கரிதான். அப்படியென்றால் நிலக்கரியை சார்ந்திருக்கக் கூடிய அனல்மின் நிலையங்களில் இருந்து வெளியே வர வேண்டும். இதற்கு மாற்று என்றால் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்தான் (renewable energy). இந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி பயணம் செய்வதற்கான முன்னெடுப்புகளை இந்தியா செய்து கொண்டிருக்கிறது. மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்த போது புவிவெப்பயமாதல் பிரச்சினையை எதிர்கொள்ள 12 திட்டங்களை அவர்கள் வகுத்தார்கள். இதையடுத்து வந்த பாஜக அரசு 2 திட்டங்களை அந்த 12 திட்டங்களுடன் சேர்த்தது. இதை தவிர்த்து கூடுதல் செயல்பாடுகள் இந்தியாவில் இல்லை. இது போதாது. 2019 ஆம் ஆண்டு ஐஐடி கான்பூர் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டார்கள். அதில் ஒட்டுமொத்தமாக காலநிலை மாற்றம் பிரச்சினையால் இந்தியாவில் எந்த மாதிரியான பிரச்சினைகள் உருவாகும் என்பதை கூறியுள்ளார்கள். அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய அளவில் புவியின் வெப்பம் 1 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்கிறார்கள். இந்தியாவுக்கான பருவநிலைக்கான மாதிரி என்பதே கிடையாது என்கிறது அந்த ஆய்வு. இந்தியாவில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணிகளை செய்கிறோம். இவையும் பூமி வெப்பமயமாதலுக்கானதுதான். இந்தியாவில் புவி வெப்பமயமாதலுக்கு காரணமாக இருப்பது தெர்மல் மின் நிலையம், போக்குவரத்து ஆகிய இரு துறைகள்தான். இந்த இரு துறைகளிலிருந்து பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை குறைக்க வேண்டும். நிலக்கரியை சார்ந்துள்ள மின் உற்பத்தியை முற்றிலும் தடை செய்ய வேண்டும். ஹைட்ரோகார்பன், மீத்தேன், பெட்ரோலியம், ஆயில் கேஸ் ஆகிய தொழில் துறைகளில் இருந்து நாம் வெளியே வர வேண்டும். போக்குவரத்து என்பதை முழுக்க முழுக்க எலக்ட்ரிக்கல் வாகனங்களை சார்ந்து இருக்க வேண்டும். இதையெல்லாம் நாம் செய்ய இன்னும் தயாராக இல்லை. நமது உற்பத்தி என்பது சூழலியல் சார்ந்து பருவநிலை மாற்றத்தை அடிப்படையாக கொண்டு இருக்க வேண்டும். அதிக மழை, வெள்ளம், வறட்சி, வெப்பம், குளிர் ஆகியவற்றை தடுக்க இயற்கை சார்ந்த பகுதிகளை (Ecologically sensitive areas)பாதுகாக்க வேண்டும் என ஐநா அறிவுறுத்துகிறது. மேற்கு தொடர்ச்சி மலைகள், அலையாத்தி காடுகள், மன்னார் வளைகுடா பகுதியில் பவள பாறைகள், ஈரநிலங்கள் உள்ளிட்டவை நமக்கு அரணாக இருந்து நமக்கான பாதிப்புகளை குறைக்கும். ஈஐஏ 2020, சூழலுக்கு எதிரான உற்பத்திகள் எல்லாம் வெப்பநிலை உயருவதை தடுப்பதற்கு முரணாக உள்ளது. வரும் பட்ஜெட்டில் காலநிலை மாற்றத்தை காக்க ஏதேனும் நிதி ஒதுக்கீடு, கொள்கைகளை கொண்டு வருகிறார்களா என பார்ப்போம் என்றார் வெற்றிச் செல்வன்.