Breaking News

உங்களுக்கு நார்ச்சத்து குறைபாடு உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்..!!!

உடலின் சிறப்பான செயல்பாட்டிற்கு நார்ச்சத்து மிகவும் அவசியமானது. நார்ச்சத்து என்பது எளிதில் செரிமானமாகாத கார்போஹைட்ரேட்டுகளாகும். இச்சத்து ஒருவருக்கு போதுமான அளவில் கிடைக்காவிட்டால், அதனால் உடலில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நார்ச்சத்தின் அளவு ஒவ்வொரு வயதினருக்கும், பாலினத்திற்கும் வேறுபடும்.
அதில் 12 மாத குழந்தைகளுக்கு தேவைப்படாது. ஆனால் 1-3 வயது குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 19 கிராமும், 4-8 வயதினருக்கு 25 கிராமும், 9-13 வயது சிறுவர்களுக்கு 31 கிராமும், சிறுமிகளுக்கு 26 கிராமும் அவசியமாகும். 14-50 வயதுள்ள ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 38 கிராமும், பெண்களுக்கு 25 கிராமும், 51 வயதிற்கு மேலான ஆண்களுக்கு 30 கிராமும், பெண்களுக்கு 21 கிராமும் தேவை.
Signs Your Body Wants You to Eat More Fiber
ஒருவரது அன்றாட டயட்டில் நார்ச்சத்து இல்லாவிட்டால், அது பல தீவிர பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்களான பழங்கள், காய்கறிகள், முழு தானிய பொருட்கள் மற்றும் உலர்ந்த பீன்ஸ் வகைகளை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டியது அவசியம். பெரும்பாலானோர் நார்ச்சத்துள்ள உணவுகளின் மீது அதிக கவனம் செலுத்துவதில்லை. மாறாக புரோட்டீன் அதிகமான மற்றும் கார்போஹைட்ரேட் குறைவான டயட்டை தான் மேற்கொள்ள நினைக்கிறார்கள்.
இப்படிப்பட்ட டயட்டை மேற்கொண்டால், உடலில் நார்ச்சத்தின் அளவு குறைய ஆரம்பித்துவிடும். சிலர் நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுகிறேன் என்ற பெயரில், பிரட், பாஸ்தா போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிடுகிறார்கள். உங்களுக்கு நார்ச்சத்துக் குறைபாட்டினால் ஏற்படும் பிரச்சனைகள் எவையென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

மலச்சிக்கல்மலச்சிக்கல்

ஒருவர் போதுமான அளவில் நார்ச்சத்தை எடுக்காமல் இருந்தால், அதன் ஆரம்ப அறிகுறியாக மலச்சிக்கல் பிரச்சனையை சந்திப்பார்கள். ஒருவர் வாரத்திற்கு 3 முறைக்கும் குறைவாக மலத்தை வெளியேற்றினாலோ அல்லது மலம் வெளியேற்றும் போது கஷ்டப்பட்டு வெளியேற்றினாலோ, அவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை உள்ளதென்று அர்த்தம்.
நார்ச்சத்துள்ள உணவுகளை ஒருவர் அதிகம் சேர்த்து வந்தால், மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். ஏனெனில் நார்ச்சத்து மலத்தை மென்மையாக்கி, எளிதில் மலக்குடலின் வழியே செல்லச் செய்து, பிரச்சனையின்றி எளிதாக வெளியேறச் செய்வதோடு, தினமும் உடலில் சேரும் கழிவுகளையும் வெளியேற்றும். மேலும் நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

உடல் பருமன்உடல் பருமன்

ஒருவரது டயட்டில் நார்ச்சத்து இல்லாவிட்டால், அது உடல் பருமனுக்கு வழிவகுக்கும். ஆனால் நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ளும் போது, அது விரைவில் வயிற்றை நிரப்ப செய்வதோடு, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதையும் தடுக்கும். மேலும் நார்ச்சத்துள்ள உணவுகளானது நீண்ட நேரம் மென்று விழுங்க வேண்டியிருப்பதால், குறைவான அளவிலேயே உணவை உட்கொள்ள நேரிடும். நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டால், அதிகளவு நீரைக் குடிக்க வேண்டுமென்று தோன்றும். இதனால் உடலில் நீர்ச்சத்தும் சரியான அளவில் இருக்கும்.

கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்

உங்கள் உடலில் திடீரென்று கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறதா? அதற்கு காரணம் நீங்கள் நார்ச்சத்துள்ள உணவை மிகவும் குறைவாக சாப்பிடுவது தான். நார்ச்சத்து ட்ரை-கிளிசரைடுகளின் அளவைக் குறைத்து, நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, உடலில் உள்ள தேவையில்லாத கெட்ட கொழுப்புக்களைக் குறைக்கும். மேலும் நார்ச்சத்துள்ள உணவுகள் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும் வகையில் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, உடலினுள் ஏற்படும் அழற்சியையும் குறைக்கும்.

உயர் சர்க்கரை அளவுஉயர் சர்க்கரை அளவு

சர்க்கரை நோயாளியாக இருந்து, உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க முடியாமல் இருந்தால், நீங்கள் சாப்பிடும் டயட்டில் நார்ச்சத்து போதுமான அளவு இல்லை என்று அர்த்தம். நார்ச்சத்தில் ஒரு வகையான கரையக்கூடிய நார்ச்சத்து, சிறு குடலில் இருந்து மெதுவாக சர்க்கரையை உறிஞ்ச செய்யும். எனவே இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள்.

உணவுக்கு பின் தூக்கம்உணவுக்கு பின் தூக்கம்

பெரிய அளவில் உணவை உட்கொண்ட பின், தூக்கத்தை உணர்கிறீர்களா? கட்டாயம் தூங்க வேண்டுமென்ற நிலையை ஏற்படுகிறதா? அப்படியானால் நீங்கள் போதுமான அளவு நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளவில்லை என்று அர்த்தம். இரத்த சர்க்கரை அளவை நிலையாக வைத்துக் கொள்வதற்கு நார்ச்சத்து மிகவும் அவசியம். எப்போது ஒருவர் குறைவான அளவு நார்ச்சத்துள்ள உணவை உட்கொள்கிறோரோ, அப்போது இரத்த சர்க்கரை அளவு வேகமாக அதிகரிக்கும். இதன் விளைவாக மிகுதியான களைப்பை உணர நேரிட்டு, உடனே தூங்க வேண்டுமென்ற நிலையை உண்டாக்கும்.

வயிற்று உப்புசம்வயிற்று உப்புசம்

நீங்கள் போதுமான அளவு நார்ச்சத்து சாப்பிடாமல் இருந்தோலோ அல்லது தவறான காம்பினேஷனில் உணவுகளை உட்கொண்டிருந்தாலோ, வயிறு உப்புசமாகவும், மிகுந்த அசௌகரியத்துடனும் இருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. போதுமான அளவு நார்ச்சத்து இல்லாத டயட்டை மேற்கொண்டால், அது வயிற்று உப்புசத்தை உண்டாக்கும். அதோடு செரிமான பிரச்சனைகளை உண்டாக்கி, வாய்வுத் தொல்லையாலும் அவஸ்தைப்படச் செய்யும்.
அதே சமயம் ஒருவர் அளவுக்கு அதிகமான அளவில் நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டாலும், வயிற்று உப்புசம் ஏற்படும். சில சமயங்களில் வயிற்று உப்புசம் மற்றும் வாய்வுத் தொல்லையால் வயிற்று வலியையும் சந்திக்க நேரிடும்.

உணவு உண்ட பின்பும் பசிஉணவு உண்ட பின்பும் பசி

நார்ச்சத்துள்ள உணவுகள் அடுத்த வேளை உணவு உண்ணும் வரை, பசி எடுக்காமல் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும். அதிலும் கரையக்கூடிய நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டால், அது செரிமான பாதையில் நீரை உறிஞ்ச, வயிறு நிரம்பிய உணர்வை உண்டாக்கும். இந்த காரணத்தினால் தான் நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டால், பசி அவ்வளவு விரைவில் எடுப்பதில்லை. மேலும் நார்ச்சத்துள்ள உணவுகள் மெதுவாக செரிமானமாகி, அதில் உள்ள சத்துக்கள் மெதுவாக இரத்த நாளங்களில் நுழையும்.

உடலில் நார்ச்சத்தின் அளவை அதிகரிக்கும் வழிகள்!

உடலில் நார்ச்சத்தின் அளவை அதிகரிக்கும் வழிகள்!நீங்கள் தினமும் போதுமான அளவில் நார்ச்சத்துள்ள உணவுகளை எடுப்பதில்லையா? அப்படியானால் எளிய வழியில் அந்த சத்தை உடலில் அதிகரிக்கலாம். உங்களுக்கு எளிய வழியில் நார்ச்சத்தின் அளவை அதிகரிக்கும் வழிகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்.


                                        #1

#1நார்ச்சத்து முழு தானிய உணவுப் பொருட்கள், பழங்கள், காய்கறிகள், பீன்ஸ், பருப்பு வகைகள், நட்ஸ் மற்றும் விதைகளில் அதிகளவில் நிறைந்துள்ளது. இவற்றை ஒருவர் அன்றாட உணவில் சேர்த்து வந்தாலே, ஒரு நாளைக்கு தேவையான அளவிலான நார்ச்சத்தைப் பெறலாம்.

#2


#2
சுத்திகரிக்கப்பட்ட அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகள் உண்பதைத் தவிர்க்க வேண்டும். இந்த உணவுகளில் நார்ச்சத்து குறைவான அளவில் இருப்பது போன்று தான் இருக்கும். ஆனால் உண்மையில் இவற்றில் நார்ச்சத்தே இருக்காது. மாறாக ஆரோக்கியத்தை சீரழிக்கும் பொருட்கள் தான் இருக்கும்.


                                                                   நன்றி: போல்ட் ஸ்கை

Avoid coal, petrol and diesel .. Only then can we prevent global warming

சென்னை: அனல் மின் நிலையம், போக்குவரத்து ஆகிய துறைகளே புவிவெப்பமயமாதலுக்கு முக்கிய காரணங்கள் என பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் வெற்றிச் செல்வன் தெரிவித்துள்ளார். பூவுலகின் நண்பர்கள் (Friends of Earth)இயக்கமானது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிரச்சினைகளை கையில் எடுத்து அதற்காக போராடி வருகிறது. எட்டு வழிச் சாலை, சுற்றுச்சூழல் தாக்க வரைவு, காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம், காலநிலை மாற்றம் உள்ளிட்டவைகளுக்காக குரல் கொடுத்து வருகிறது. Exclusive: Poovulagin Nanbargal movement Vetriselvan says about Global warming இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் வெற்றிச் செல்வன் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டி கேள்வி பதில் வடிவில்: கே: சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட 12 நகரங்கள் 3 மீட்டர் ஆழத்திற்கு கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து உங்கள் கருத்து என்ன ப: 1980 ஆம் ஆண்டுகளில் இருந்தே புவி வெப்பமயமாதலை கேள்விப்பட்டு வருகிறோம். பூமி சூடாகி வருகிறது. இதன் காரணமாக காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. புவி வெப்பமாவதன் காரணமாக ஆர்டிக் மற்றும் அன்டார்டிக் பகுதிகளில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. இதனால் தண்ணீரின் அளவு அதிகமாகிறது. இதனால் கடல் மட்டத்தின் அளவானது உயர்ந்து கொண்டே இருக்கிறது. இது போல் நிகழும் போது கடல் மட்டத்தை விட உயரம் குறைவாக உள்ள நிலப்பகுதிகள் உள்ளே போய்விடும். இதுதான் இயல்பு, எனவே தாழ்வாக இருக்கும் பகுதிகள் கடலுக்குள் செல்ல வாய்ப்பிருக்கிறது. நாசாவின் ஆய்வானது முதல் ஆய்வு அல்ல. அதற்கு முன்பாகவே பல்வேறு ஆய்வுகள் வெளியாகியுள்ளன. அண்மையில் 2018ஆம் ஆண்டு Central Climatic Centre என்ற அமைப்பு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். இந்த அறிக்கையில் 2030 - 2040 ஆம் ஆண்டுக்குள் கடலின் நீர் மட்டம் உயர்வதால் பல பகுதிகள் மூழ்கும் ஆபத்து உள்ளதாக சொல்லியுள்ளார்கள். எந்த காலகட்டத்தில் எந்த அளவுக்கு இதெல்லாம் நடக்கும் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வந்துள்ளன. நாசா இந்த நூற்றாண்டின் முடிவில் இது போல் நிகழும் என சொல்லியுள்ளது. பூமியின் தட்பவெப்பநிலையி்ல எந்த அளவுக்கு மாற்றம் ஏற்படுகிறது, அதன் காரணமாக பனி எந்த அளவுக்கு உருக்கம் இருக்கும், இதன் காரணமாக கடல் மட்டம் எந்த அளவுக்கு இருக்கும் என சொல்லியுள்ளது. பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் கடல் மட்டம் உயர்வு என பார்த்தால் 3 அடி முதல் 7 அடி வரை உயர வாய்ப்புள்ளது. அப்படி நிகழும் பட்சத்தில் பல நிலப்பரப்புகள் கடலுக்குள் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்டவை எல்லாம் கடலில் மூழ்கக் கூடிய ஆபத்து இருக்கும் பகுதிகள். கூடுதலாக டெல்டா பகுதிகள், கிருஷ்ணா கோதாவரி பகுதிகள் உள்ளிட்ட டெல்டா பகுதிகள் இவையெல்லாமும் கடலுக்குள் மூழ்குவதற்கான ஆபத்து இருக்கின்றன. இந்த ஆபத்தை எதிர்நோக்கிதான் சென்று கொண்டிருக்கிறோம். கே: புவி வெப்பமயமாதலை தடுக்க ஐநா எடுக்கும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறதா ப: 1980 களிலேயே புவி வெப்பயமாதல் குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துவிட்டார்கள். 1991 ஆம் ஆண்டு பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக ஐநா ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கினார்கள். பருவநிலை மாற்றத்திற்கான ஐ நா குழுவின் ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக 1997 இல் கைட்டோ புரோட்டோகால் என்ற ஒப்பந்தம் வந்தது. இந்த இரு ஒப்பந்தங்களும், "காலநிலை மாற்றம் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதை தடுக்க நிறைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாடுகள் தாமாக முன் வந்து பசுமை இல்ல வாயுக்களான கார்பன், மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு போன்ற வாயுக்களின் வெளியேற்றத்தை குறைக்க வேண்டும்" என்ற அளவில் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இந்தியா அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அமெரிக்கா தொடக்கத்திலிருந்தே இந்த ஒப்பந்தத்தை எதிர்த்துக் கொண்டுதான் வந்தது. இந்த இரு ஒப்பந்தங்களுமே காலாவதியான பிறகு 2016 ஆம் ஆண்டு பாரீஸில் இன்னொரு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. மற்ற இரு ஒப்பந்தங்களும் வெறும் ஆலோசனைகளை மட்டுமே சொல்லியுள்ளன. ஆனால் இந்த பாரீஸ் ஒப்பந்தமானது இலக்கை நிர்ணயித்தது. இதில் "பூமியின் தட்பவெப்பநிலை கண்டிப்பாக உயரக் கூடும். அதை எந்தளவுக்கு உயரவிடலாம் என்பதை பார்க்கும் போது 1.5 டிகிரி சென்டிகிரேட் அளவுக்கு உயர்ந்தால் நம்மால் சமாளிக்க முடியும். இதுவும் ஆபத்தானதுதான், எனினும் உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகள் இருந்தது. இனி வரும் காலங்களில் பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸுக்கு உயரத்தான் போகிறது. அதற்குள் வெப்பநிலையை வைத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இது 2 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் சென்றால் மிகவும் ஆபத்தாகிவிடும்" என அந்த ஒப்பந்தம் சொல்லியதோடு அதற்கு நாம் என்னவெலாம் செய்ய வேண்டும் என்பதையும் அந்த ஒப்பந்தம் சொல்லியுள்ளது. இன்னும் உள்ள 10 ஆண்டுகளில் உலக நாடுகளில் இருந்து வெளியேறக் கூடிய பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை 50 சதவீதமாக குறைக்க வேண்டும். 2050 ஆம் ஆண்டுக்குள் அதை ஜீரோவாக்க வேண்டும். கார்பன் வெளியேற்றமே இருக்கக் கூடாது. அப்படியான ஒரு நிலை வந்தால் மட்டும்தான் பூமியின் வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அளவுக்கு நம்மால் கட்டுப்படுத்த முடியும். இதை பின்பற்றுமாறு ஐக்கிய நாடுகள் முன் வைக்கிறார்கள். இந்த ஆலோசனைகளின்படி உலக நாடுகள் நடந்து கொள்கிறார்களா என்றால் ஏமாற்றமே விஞ்சுகிறது. கொரோனா காலத்தில் கூட பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் அதிகமாகவே உள்ளது. கே: புவிவெப்பமயமாதலுக்கு எதிராக மத்திய மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கை பலனை தருகிறதா? ப: இந்தியாவை பொருத்தமட்டில் 2016 ஆம் ஆண்டு பாரீஸ் ஒப்பந்தத்தில் நாம் கையெழுத்திட்ட பின்னர் பசுமை இல்ல வாயுக்களை இந்த அளவுக்குத்தான் வெளியிடுவோம் என ஒவ்வொரு நாடுகளும் அளவை நிர்ணயித்துக் கொள்ளலாம். அந்த வகையில் இந்தியா 2030-ஆம் ஆண்டுக்குள் 30 சதவீதம் அளவுக்கு பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை குறைப்போம் என இந்தியா வாக்குறுதி அளித்தது. புவி வெப்பமயமாதலுக்கு அடிப்படை காரணமாக இருப்பதே நிலக்கரிதான். அப்படியென்றால் நிலக்கரியை சார்ந்திருக்கக் கூடிய அனல்மின் நிலையங்களில் இருந்து வெளியே வர வேண்டும். இதற்கு மாற்று என்றால் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்தான் (renewable energy). இந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி பயணம் செய்வதற்கான முன்னெடுப்புகளை இந்தியா செய்து கொண்டிருக்கிறது. மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்த போது புவிவெப்பயமாதல் பிரச்சினையை எதிர்கொள்ள 12 திட்டங்களை அவர்கள் வகுத்தார்கள். இதையடுத்து வந்த பாஜக அரசு 2 திட்டங்களை அந்த 12 திட்டங்களுடன் சேர்த்தது. இதை தவிர்த்து கூடுதல் செயல்பாடுகள் இந்தியாவில் இல்லை. இது போதாது. 2019 ஆம் ஆண்டு ஐஐடி கான்பூர் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டார்கள். அதில் ஒட்டுமொத்தமாக காலநிலை மாற்றம் பிரச்சினையால் இந்தியாவில் எந்த மாதிரியான பிரச்சினைகள் உருவாகும் என்பதை கூறியுள்ளார்கள். அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய அளவில் புவியின் வெப்பம் 1 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்கிறார்கள். இந்தியாவுக்கான பருவநிலைக்கான மாதிரி என்பதே கிடையாது என்கிறது அந்த ஆய்வு. இந்தியாவில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணிகளை செய்கிறோம். இவையும் பூமி வெப்பமயமாதலுக்கானதுதான். இந்தியாவில் புவி வெப்பமயமாதலுக்கு காரணமாக இருப்பது தெர்மல் மின் நிலையம், போக்குவரத்து ஆகிய இரு துறைகள்தான். இந்த இரு துறைகளிலிருந்து பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை குறைக்க வேண்டும். நிலக்கரியை சார்ந்துள்ள மின் உற்பத்தியை முற்றிலும் தடை செய்ய வேண்டும். ஹைட்ரோகார்பன், மீத்தேன், பெட்ரோலியம், ஆயில் கேஸ் ஆகிய தொழில் துறைகளில் இருந்து நாம் வெளியே வர வேண்டும். போக்குவரத்து என்பதை முழுக்க முழுக்க எலக்ட்ரிக்கல் வாகனங்களை சார்ந்து இருக்க வேண்டும். இதையெல்லாம் நாம் செய்ய இன்னும் தயாராக இல்லை. நமது உற்பத்தி என்பது சூழலியல் சார்ந்து பருவநிலை மாற்றத்தை அடிப்படையாக கொண்டு இருக்க வேண்டும். அதிக மழை, வெள்ளம், வறட்சி, வெப்பம், குளிர் ஆகியவற்றை தடுக்க இயற்கை சார்ந்த பகுதிகளை (Ecologically sensitive areas)பாதுகாக்க வேண்டும் என ஐநா அறிவுறுத்துகிறது. மேற்கு தொடர்ச்சி மலைகள், அலையாத்தி காடுகள், மன்னார் வளைகுடா பகுதியில் பவள பாறைகள், ஈரநிலங்கள் உள்ளிட்டவை நமக்கு அரணாக இருந்து நமக்கான பாதிப்புகளை குறைக்கும். ஈஐஏ 2020, சூழலுக்கு எதிரான உற்பத்திகள் எல்லாம் வெப்பநிலை உயருவதை தடுப்பதற்கு முரணாக உள்ளது. வரும் பட்ஜெட்டில் காலநிலை மாற்றத்தை காக்க ஏதேனும் நிதி ஒதுக்கீடு, கொள்கைகளை கொண்டு வருகிறார்களா என பார்ப்போம் என்றார் வெற்றிச் செல்வன்.